2 கவி பாடலாம்
அமையும் போது நாலு நாலாக அமைந்த மோனைக் கூட்டம் எட்டு எட்டாகச் சில எழுத்துக்களுக்கு அமையும்.
ச-சா-சை-செள-த-தா-தை-தெள என்னும் எட்டிலும் எந்த ஒன்றுக்கும் வேறு எந்த ஒன்றும் மோனையாக வரும். ச-வுக்கு, தெள-வரலாம். செள-க்கு, த.வரலாம். சா-வுக்கு, தை-வரலாம். இப்படியே சி. சு என்ற இரண்டு எழுத்துக் க ைமுதலாக உடைய மோனைக் கூட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ம-மா-மை-மெள-வ-வா-வை-வெள என்பவை ஒரு மோனைக் கூட்டம்.
ஞ-ஞா-ஞை-ளுெள-த-நா-நை-நெள என்பவை ஒரு கூட்டம்.
“நாடிய பொருள் கை கூடும்
ஞானமும் புகழும் உண்டாம்”
என்ற கம்பராமாயணப் பாட்டில் நா-ஞா என்ற இரண்டும் மோனையாக வந்தன.
“சுதந்தர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே! என்ற பாரதி பாட்டில் சு-என்ற எழுத்துக்குத் தொ-என்பது மோனையாக வந்திருப்பது காண்க. ச்-என்ற மெய்க்கு
த்-என்ற மெய்யும், உ-என்ற உயிருக்கு ஒ-என்ற உயிரும் மோனையாக வந்தன.
“பச்சையா மலைபோல் மேனிப்
பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்