90
இரத்தத் துளிகள் பயிராகின்றன
"பம்பு செட்ட உடைப்பேன்னு எதுக்காவல சொன்ன? ஒன்னால உடைக்க முடியுமால..."
"அவன்கிட்ட எதுக்குடா. வாய்ப்பேச்சு. கையால பேசுடா..."
'ஏமுல. பதில் பேச மாட்டாக்க உடைக்கப்போற கையை ஏண்டா... மடக்குற... எங்க... அந்த. கைய... பாக்கலாமா?”
"இன்னுமாடா... பேசிக்கிட்டு இருக்கீக... தூக்கிப் போட்டு மிதிங்கல..."
இதற்குள் கூட்டம்கூடி விட்டது. வினைதீர்த்தான் அடிபடப் போவதற்கு முன்னால், நல்லவேளையாக நாலைந்து பேர் கூடிவிட்டார்கள். அடிபடப் போனவன் முறையிட்டான்.
"நீங்களே சொல்லுங்க... கமலக்கிடங்க... எடுத்துக்கிடுகிறேன். நீ பம்புல. தண்ணி பாய்ச்சுக்கன்னு சொல்லிட்டு. இப்போ. செட்ட... மூடுனா. நியாயமா... நீங்களே. சொல்லுங்க... நீங்க என்ன சொன்னாலும். கட்டுப்படுறேன்."
அடிக்கப் போனவர்கள் மிரட்டினார்கள்.
"நாங்க அப்படித்தான் மூடுவோம். நீ என்ன செய்யணுமோ செய்துக்க. வேணுமன்னா. கோர்ட்டுக்கு வேணுமுன்னாலும் போ. அதவிட்டுப்புட்டு. அதை உடைப்பேன். இத உடைப்பேன்னு. சொன்னியானா. உடப்புக்குள்ள போயிடுவே. ஜாக்கிரதையா நடந்துக்க. ஒன் பெண்டாட்டி பத்திரம்..."
மிரட்டியவர்கள், கூட்டத்தைப் பொருட் படுத்தாமல் போய்விட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒரு சில நீதிமான்கள், வக் கீல் படிப்பு படிக்க வேண்டிய அந்த ஆசாமிகள், வினைத்தீர்த்தானை வேறுவிதமாகக் கேட்டார்கள்.
'ஒனக்கு... அறிவு எங்கடா. போச்சி. அவன். ஏமாந்தா., ஆளையே. ஏப்பம்போடுகிற பய. கமலக்கிடங்க... மூடக்கூடாதுன்னு சொல்ல வேண்டியதுதானா? குடுமியை பிடிக்கக் குடுத்துட்டு. இப்ப வலிக்குதேன்னா... என்னடா பண்ண முடியும்"
வினைத்தீர்த்தான் விம்மினான்.
"மச்சான். இப்ப நடந்ததுக்கு வழிசொல்லும்”
"நீ... எங்கிட்ட கேட்டுக்கிட்டா. கமலக்கிடங்க குடுத்த? எடாத எடுப்பு எடுத்தால் படாதபாடு பட வேண்டியதுதானே.”