பக்கம்:காகித உறவு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

91



"நான் போட்ட பணமுல்லாம் நாசமா. போயிடுமே. அவர் நிலத்தக் கேட்டாரு... நான் மாட்டேன்னு சொன்னதுக்காவ... இப்படிப் பண்றாரு.. இது ஒங்களுக்கு தெரியமாட்டக்கே..."

"தெரியதுடா. ஆனா... அதெல்லாம். விவகாரமுன்னு வரும்போது. எடுபடாது. நீங்க, ஆயிரம் பேசியிருந்தாலும் சபையிலே நிக்காது, அவன் பழிகாரப் பயலாச்சே."

"பாத்துப் பேசும்வே. அந்தக் குடிகாரப் பய வரான். வாரும் மாப்பிள்ள... சந்தைக்குப் போயிட்டு வாரியரோ. வீராசாமி மாப்பிள்ள... இந்த வினைதீர்த்தான் பயல.. ஒமக்குச் ஜோடியா... எப்படியோ. பெரிய மனசு பண்ணி தண்ணி விடும். ஒழிஞ்சு போறான்"

வீராசாமி அவர்களை நிமிர்ந்து பார்த்தார். இரண்டு பேர் கடன் வாங்கியவர்கள். மூவர் கடன் கேட்டுக் கொண்டிருப்பவர்கள். ஒருவர் தன் மகனுக்கு இவருடைய தயவில் பஞ்சாயத்து யூனியனில் வேலை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர். வீராசாமி அலட்சியமாகப் பேசினார்.

“தனக்குப் போவத்தான்... தானம். கிணத்துல தண்ணி வத்திக்கிட்டு வருது. என் வயலுக்கே... தண்ணி பத்தல..."

"இருந்தாலும்.நீரு. பெரிய மனசு வச்சி."

'அவன் பம்பு செட்ட உடச்சி... எடுத்துக்குவானாம் மவராசானா. எடுத்துக்கட்டும்"

"அப்படியா. சொன்னான். கழுதப்பய... ஏல... பெரிய மனுஷனப்பார்த்து. அப்படியால கேக்கது. நாங்க... நியாயம் பேச. முடியாதபடி. பண்ணிப்பிட்டு. இப்போ பாசாங்கு போடுதியாக்கும். மாப்பிள்ள... நீரு. போவம்...'

ரண்டு நாட்கள் போயின.

வினை தீர்த்தானின், நெற்பயிர்கள் சவலைப் பிள்ளைகளாயின. நெற்கதிர்கள் சுருங்கத் துவங்கின. செடிகளின் அடிப்பாகம், உலரத் துவங்கியது. அன்றைக்குத் தண்ணீர் பாயவில்லையானால் வைக்கோல்கூடக் கிடைக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/93&oldid=1383370" இலிருந்து மீள்விக்கப்பட்டது