பக்கம்:காகித உறவு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

இரத்தத் துளிகள் பயிராகின்றன



பம்ப் செட்டை 'ஆப்' செய்துவிட்டு, கதவை மூடிய வீராசாமியை வினைதீர்த்தான் கண்கள் குளமாகப் பார்த்தான். அவர், அருகில் போய் நின்று கொண்டு கைகளைப் பிசைந்தான். தலையைச் சொறிந்தான். "மாமா'

"ஒங்க. அத்தய. நான் வச்சிக்கிட்டா இருக்கேன். என்னை மாமான்னு சொல்லுத?"

அடிக்கத்துடித்த கைகளை அடக்கிக் கொண்டு, கொதித்த கண்களைத் தாழ்த்திக் கொண்டு வீராசாமி, தன் வயல் பக்கம் வந்தான். பயிர்களைப் பார்க்க பார்க்க, தன் பத்து வயது மகன் மரணத்துடன் போராடிய காட்சி, அவன் நினைவுக்கு வந்தது. அன்று கண்ணுக்குத் தெரியாத எமனைச் சபித்த அவன் கண்ணுக்குத் தெரிந்த இந்த எமனை, பார்த்துட வேண்டியதுதான் என்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு புறப்படப் போனபோது மாடக்கண்ணு மச்சான் வந்தார். பக்கத்து வயல்காரர் 'நாலு மரக்கால் 'விதப்பாட்டில் நாள் முழுதும் போராடுபவர். . "ஏமுல பித்துப் புடிச்சி நிக்குற. என் கிணத்துல. அர நாள். இறவ எனக்குவரும். அதுல. ரெண்டு நாழிய. நீ. எடுத்துக்கடா. என் வாய்க்கால் தண்ணி ஒனக்குப் பாயுமே..."

'மாடு. இல்லியே.. மச்சான்." "யாருகிட்டேயாவது கேளு... என் மாடு கிழடு. அரநாள் தாங்காது. மாடு கிடைக்காட்டா. இருக்கவே இருக்கு... என் மாடு."

வினைத்தீர்த்தான், கரையில் போய்க் கொண்டிருந்த வீராசாமியை, அலட்சியமாகப் பார்த்தான். பயிர்களை வாஞ்சையோடு பார்த்தான். வாடகை இறவைக்காக நாலைந்து பேரைப் பார்த்தான். ஆசாமிகள் நழுவி விட்டார்கள். ஏதோ ஒரளவு தைரியமுள்ள ஒரு விவசாயி தன் மாடுகளை தானே கொண்டு வந்து, தானே கமலை கட்டுவதாகச் சொல்லிவிட்டார். வாடகை ஐந்து ரூபாய் பெரிசில்லை.

வீட்டுக்கு வந்த வினைதீர்த்தான் மனைவி, இடிந்த முகத்தோடு வரவேற்றாள்.

"மாடக்கண்ணு மச்சான், தண்ணி தருவேன்னுட்டார். கவலய விடு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/94&oldid=1383378" இலிருந்து மீள்விக்கப்பட்டது