பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் முழுவினை : என்ற விடத்து நம்பிள்ளை காட்டும் ஓர் ஐதிகம் : பட்டர்" திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருந்த காலத்து அங்குத் தெற்காழ்வான், கோளரியாழ்வான் என்ற இருவர் வாழ்கின்றனர். கோளரியாழ்வான் நற்குண நல்லொழுக்கமுடையவன்; தெற்காழ்வான்' சாதாரணமாகக் காணப்பெறும் மனிதன். இருவரும் ஒருசிறப்பான திதியன்று ஒரு குளக்கரையில் சந்திக்கின்றனர். கோளரியாழ்வான் தெற்காழ்வானை நோக்கி, "அப்பா, இன்று புண்ணிய தினமாயிற்றே; இன்றாகிலும் ஒரு முழுக்கிடமாட்டாயா?" என்கின்றான் அது கேட்ட தெற்காழ்வான், "முழுக்கிட வேணுமென விதிக்கிற உன் அபிப்பிராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் சில தொலையக் கூடும் என்பது தானே, அந்தோ என்னுடைய பாவம் திருக் கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் செளமிய நாராயணப பெருமாளுடையக் கையிலுள்ள திருவாழியால் போக்கினால் போகுமேயல்லாது ஒன்றிரண்டு முழுக்கால் போகக்கூடியது அன்று காண்!” என்கின்றான். இச்சொற்கள் பட்டருடைய திருச்செவிக்கு எட்டின அளவில் "ஆ! அ! எவ்வளவு ஆத்திகனாக இருந்தால், இந்த வார்த்தை சொல்ல முடியும்? இவனை மேலெழுந்த வாரியாகப் பார்த்து நாத்திகன் என்று நினைத்திருந்தோமே. இவ்வளவு பேசும் பரிபாக முடையவனா இவன்?" என்று மிகவும் ஈடுபட்டதாக வரலாறு. நாயகி நிலையிலிருக்கும் ஆழ்வார், "கொம்மை முலைதன் இடர்தீர கோவிந்தற்கோர் குற்றேவல்" (நாச்.திரு.13:9) என்ற ஆண்டாளைப் போல் "முலையால் அணைக்க" என்று சொல்ல வேண்டியிருந்தும் "திருவடிக்கீழ்க் குற்றவேல்" (2) என்று சொல்லுகின்ற அழகு காண்மின் 20.கூரத்தாழ்வானின் திருக்குமாரர்; எம்பாருடைய மாணவர்; நஞ்சீயருடைய ஆசாரியர். 21. திருக்கோட்டியூர் திருக்கோயிலில் இப்படி ஒரு சந்நிதி உண்டு.