பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

காஞ்சி வாழ்க்கை


 சுந்தர ஒதுவா மூர்த்திகள், சச்சிதானந்தம் பிள்ளை, புரிசையார் இன்னும் பல பெரியவர்கள் அந்த இறுதிநாள் சடங்கில் பங்குகொண்டு அதை ஒரு பெரு விழாவாக எங்களுரில் கொண்டாடினர். எனது ஆற்ற முடியாத துன்பத்தை அத்தகைய பெரியவர் தம் வருகையாலும் வாழ்த்தாலும் ஓரள்வு பொறுத்துக்கொண்டேன். எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் என் துன்பத்தைக் கண்டு நான் அந்த ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வரவேண்டாம் என்று சம்பளத்துடன் விடுமுறை அளித்தார். அன்னையின் மறைவுக்குப் பின் நான் எங்கும் அதிகமாக வெளியில் செல்லுவதில்லை. எந்த விழாவிலும் பங்குகொள்ளவதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பேன். அடிக்கடி என் பெரிய அன்னயார் கூறிய ஆறுதல் ஓரளவு தேற்றும் . இதற்கிடையில் ஊரில் மகன் வாழ்வு மங்கி வருவதை அறிந்தேன். அவர்கள் வறுமையுற்ற காரணத்தால் சரியான உணவைத் தாராததோடு தக்க வைத்தியமும் செய்யவில்லை என அறிந்தேன். ஒருமுறை நான் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லி அனுப்பினேன். அவர்கள் வரக் கூடாது எனத் தடுத்தனர். சென்றால் வேறு கொடுமைகள் நிகழுமென அஞ்சித் திரும்பினேன். மற்றொரு முறை நான் தெரு வழியாகச் சென்றபோது அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். நான் எங்கே கண்டு கொண்டுவந்து விடுவேனோ என்று கருதி அவன் பாட்டனார் என்னைத் தூரத்தே கண்டதும் எடுத்து உள்ளே ஓடிவிட்டார். இப்படி என் மகனை நானே பார்க்க முடியா நிலையில் இருந்தேன், கடைசியாகக் கண்ட இடம்? அவனைப் பிணமாகத் தான் என்னால் காண முடிந்தது.

மைந்தன் பிறந்ததை எப்படிச்சொல்லி அனுப்பவில்லையோ அப்படியே இறந்ததையும் அவர்கள் சொல்லி அனுப்பவில்லை. எனினும் ஊரில் எங்கள் நிலங்களைப் பார்த்திருந்த பெரியவர் உடனே ஆளை அனுப்பினார்.நானும் பெரிய