பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ முடியுமா?


விதைக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அது என்னென்னவோ சாதிக்க முடியாதனவற்றை யெல்லாம் சாதித்து விடுகிறது. ஒரு இரண்டு மணிநேரம் சொற்பொழிவு நிகழ்த்திக்கூடக் கேட்பவர் உள்ளத்திலே கருத்தை நன்றாகப் பதிய வைக்கவோ, தெளிவாக்கவோ முடிகிறதில்லை. அந்தக் காரியத்தை ஒன்றிரண்டு வரிகளில் கவிதை மிக நல்ல முறையில் செய்து விடுகிறது. ஒரு சமயம் இங்கிலாந்திலே ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. கிறிஸ்து நாதர் தண்ணிரைத் திராட்சைரச மதுவாக மாற்றியளித்த கதையைப் பொருளாகக்கொண்டு கட்டுரை எழுத வேண்டுமென்று ஏற்பாடு. பலர் போட்டியிற் கலந்துகொண்டார்கள். ஜான் பணியன் என்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர் அப்பொழுது சிறுவராக இருந்தார். அவரும் இதில் கலந்துகொண்டார். எல்லோரும் நீள நினைந்து, பக்கம் பக்கமாக வரைந்து தள்ளினார்கள். ஆனால், பனியன் மட்டும் ஒன்றுமே எழுதாமல் ஏதோ எண்ணமிட்டுக்கொண்டிருந்தார். கடைசி வரையிலும் ஒரு எழுத்துக்கூடத் தாளில் பதிவாகவில்லை. இன்னும் இரண்டு நிமிஷம்தான் உண்டு; அதற்கு மேலே யாரும் எழுதக் கூடாது ' என்று அறிவித்தார்கள். அப்பொழுதுதான் அவருக்கு எழுத வேண்டுமென்று தோன்றியது. உடனே, "தண்ணீர் தனது நாதனைக் கண்டு நாணத்தால் சிவந்தது ”