பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

超65

கருத்தறிந்து கொள்ள வேண்டியதுதானே நாகரிகம், நியாயம், தருமம்?-அவ்வாறு செய் தாரா?ஊகூம்: ஜனநாயகப் பண்பாடு குடும்பத் திலும் செல்லுபடியாக வேண்டியதுதான் மரபு: அல்லவா?

ஒரு நடப்பைத் திரும்பவும் எண்ணிப் பார்த் தான் வீரமணி. கழிந்த மே மாதத்தின் மூன்ரும் வார இறுதியில் சஞ்சலம் கண்ட உள்ளத்தோடு அவன் பட்டணத்திற்குப் பயணப்பட்ட நேரத்தில், அன்பின் துதுவர்போல, அம்பாஸ்டர் காரில் வந்திறங்கிய சீமான் பெரிய கறுப்பத்தேவர் தன் பேரில் அன்பு மாரி பொழிந்த காரணத்தின் கருத்துரை, தன்னுடைய தந்தையின் முடிவுக்கு அன்றைக்குத் தன் காதைக் கொடுத்த போதே அவனுக்குப் புரிந்து விட்டது. சோழியன் குடுமி இரு தரப்பிலும் காரியத்தில் கண் வைத்துத்தான் ஆடி யிருக்கிறது! பாளை வெடித்ததை நினைவு படுத்தும் சிரிப்பு, பெருமூச்சை வென்று வெளியேறியது. எதையும் தாங்கும் சிரிப்பா? அன்றி, எதையும் சாடும் நகைப்பா அது? -

முன்கட்டு அறைக்குள் நுழைந்தான் அவன். நாளேடு ஒன்று ஏடு விரிந்து கிடந்தது, முடங்கல்கள் சில முடங்கிக் கிடந்தன. படிப்புச் சோதனையில் நல்ல சாதனையுடன் வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக்கள் கிடைத்

திருந்தன.

கா. நி.-11