பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

罗罗莎

'அந்த வைரச் சிமிக்கிகள்தான் என்னுடை யது இல்லிங்கன்னு முன்னடியே சொல்லிப் புட்டே. னுங்களே, அத்தான்!'

'வாஸ்தவந்தான், அன்னம். இந்த வைரச் சிமிக்கிகள் உன்னுடையது இல்லேன்னு நீ மண்டை யிலே தட்டினப்பிலே வெட்டிப் பேசிட்டே, அந்தத் துப்பு எனக்கு நல்லாய் ஞாபகத்திலே நிற்குது. ஆன. இந்த வைரச் சிமிக்கிகள் இரண்டும் யாருடைய தின்னு மட்டுப் படலேயே, அன்னம்?-ஒய்யாரக் கொண்டைக்காரி செங்கமலத்தின் ஞாபகம் கெட்ட கனவாகப் பிசிறு தட்டித் தொலைத்தது!

"அந்த உளவு எங்க அப்பன்காரருக்குத்தான் வெளிச்சம், அத்தான்!”

'ஒகோ! அப்படியா சங்கதி? மனிதர்களுக்கு வயசு கூடக் கூட புத்தித் தடுமாற்றமும் கூடிக்கிட்டு இருக்கும்னு தோணுது. நான் இதுமட்டும் என் அப்பாவைப்பற்றித் தான் இப்படி நினைச்சிக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப அம்மான் விசயமும் தே கதைதான?... அம்மான்காரர் இருட்டிலே பொறிகலங்கி நிற்கையிலே, அவருக்கு வெளிச்சம் எங்கிட்டுக் கிடைக்கப் போகுது? அந்திக் கட்டிலே உங்க வெள்ளைக்காளே சம்பந்தமாய் அம்மான் வாசலுக்கு நடைபாவி வந்தாங்க. காளை யும் கையுமாகத் திரும்பிடாலம்னு வந்தவங்களுக்கு வெறுங்கையோடே தான் திரும்ப வாய்ச்சுது. அவர் போன சடுதியிலே தான் இந்த வைரச்சிமிக்கிகள் என் கண்ணிலே தட்டுப்பட்டுச்சு, வைரச் சிமிக்கி