229
22.9
கொண்டான். பூடகமாகப் பேச்சுக் கொடுத்த அன்னத்தின் கேள்வியில் தொக்கி நின்ற உள். அர்த்தத்தை அவளுல் தற்சமயம் உணர முடிந்தது. ஆலுைம், எதுவுமே விளங்காதவன் போல்-எதை யும் பிடி எடுத்துப் பிடித்துக் கொள்ளாதவன் போல் அன்னக்கொடியை அளப்பதில் ஈடுபட்டான், "சங்கதியைப் பிட்டுவச்சுச் சொல்லிப்பிடப்படாதா அன்னம்?' என்று வினவிஞன்.
"அத்தான், நீங்ககூட புதிர் ஆசாமிதான் என்கிற உண்மையை இப்பத்தான். என்னலே விளங்கிக்கிட வாய்ச்சது. நீங்க ஆணுய்ப் பிறந் தவங்க. எப்படி வேனுமானலும் நடக்கலாம்; நடிக்காலம்! ஆன பாழாய்ப்போன இந்த பயங்கரச் சமுதாயத்தின் மத்தியிலே பெண்ணுய்ப் பிறந்த தான் உங்களை மாதிரி நடக்கவோ, அல்லது நடிக்கவோ ஏலுங்களா?' என்று பேசி முடித்தாள் அன்னக் கொடி.
‘விசயத்துக்கு வா, புள்ளே!”
'விசயத்துக்கு வரவேண்டியவங்களே நீங்க தானுங்களே, மச்சானே?’
"ஓ, அப்படியா?" என்று அரைச் சிலிர்ப்புடன் அரைச் சிரிப்பை வெளிப்படுத்தியனுக, 'இந்தாலே விசயத்துக்கு வந்துப்பிடுறேன்!” என்று ஒரக்கண் சிமிட்டிச் செப்பிக் கொண்டே, நெருங்கி, அவளுடைய சிந்துாரக் கன்னங்களைத் தொட்டான் வீரமணி.
கா. நி.--15