பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

23 I

"அது கிடிக்கட்டும். இப்போ இந்த வைரச் சிமிக்கிகளை என்ன செய்கிறதாம்?' என்று கேட்ட படி, அம்மான் மகளை வாரியணைக்க முனைந்து வீரமணியின் அகன்று விரிந்த கைகள் அடுத்த இமைப்பில் துடிதுடித்தன. விளைவு என்ன, தெரியுமா? அவன் கையிலிருந்த அந்த வைரச் சிமிக்கிகள் கீழே மண் தரையில் சரணடைந்து விட்டன.

அப்போது, அங்கே அதிசயமும் அதிர்ச்சியும் விதியாகச் சிரிக்கத் தலைப்பட்டன. கூன் பிறை விழித்தது:

கீழே நழுவி வீழ்ந்த இரண்டு வைரச்சிமிக்கி களின் ஒன்று, ஊர் நாட்டாண்மை ஆதிமூலத் தேவர் வசத்திலும், மற்ருென்று சிங்கப்பூர் ராமையாத் தேவர் வசத்திலும் அடைக்கலம் அடைந்திருந்தன!

15. ஆசை அன்னத்துக்கு,

அருமைத் துணைவன் !

ஊர் நாட்டாண்மை ஆதிமூலத் தேவரும் சிங்கப்பூர் ராமையாத் தேவரும் ஒருவரையொருவர் எரித்து, ஒருவர் சாம்பலை மற்றவர் நெற்றியில் பூசிக் கொண்டு கொக்கரிக்கத் தவிப்பவர்கள் போலவும், ஒருவரை மற்றவர் விழுங்கி ஏப்பம்விடத் துடிப் பவர்கள் போலவும் தோன்றினர்கள்!-ஐந்தாறு நிமிட இடைவெளிக்குள்ளே ஆயிரம் தடவை.