பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

芝爱茉

அப்பாவின் ஏடாகூடமான கேள்விக்கு மகன் விடையிறுக்கத்தான் வேண்டும். ஆனல், அவனே வாய் மூடி மெளனியானன் !

ஆதிமூலத்தின் இதயத்திலே சாம்பல் பூத்த தனலாகக் குமைந்து கொண்டிருந்த ஐயமும் சினமும் காற்றுப் பட்டுக் கனல் தெறித்தன. 'வீரமணி! உன்னைப் பெற்ற அப்பன்-இந்த ஆவணத் தாங்கோட்டை ஊர் நாட்டாண்மைக் காரன் கேட்கிறேன். கேட்டதுக்குப் பதில் சொல் லாமல் வாயை மூடிக்கிட்டு நிற்கிறதைப் பார்த் தால், உன் அம்மான் தன் மகள் அன்னத்தைக் கொண்டு உன்னே மசிய வச்சு வசியம் பண்ணிட் டான்னு அர்த்தமா? .ே தம்பி, பேசு!" என்று ஆற்ருமையோடு கேட்டார்.

'அப்பா, நீங்களோ என்னைச் சிலட்டுர் மாப் பிள்ளையாக்கக் கங்கணம் கட்டிட்டிங்க: என் அம்மானே என்னைத் தன் வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கிக்கிடப் போறதாகச் சவால் விட்டிருக்காங்க! இதுக்கு ஊடாலே என்ைேட சொந்த அபிப் பிராயத்தை பற்றித் தெரிஞ்சுக்கிட உங்க ரெண்டு பேரிலே யாருக்குமே பொறுப்பு ஏற்பட்டதில்லிங் களே!’ என்று ஒரு புதிய குரலில் சொல்லி முடித் தான் வீரமணி.

அன்னக்கொடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நின்ருள். வேகமாக அடித்த சுழிக்காற்றில் பறந்து வந்து காலடியில் தஞ்சம் அடைந்த ஒரு கடிதத் தாளை நவியாமல் கைப்பற்றி நிமிர்ந் தாள .