பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

罗莎晏

“ஒருவேளை, உன் ஆசை மச்சான்-என் மாப்பிள்ளை இந்தக் காளையை, அப்பன்காரர் அசந் திருந்த சமயம் பார்த்து அவிழ்த்து விட்டிருக் குமோ?” -

"ஆமாங்க; அப்படித்தான் முக்காலறுப்பு கதை தடம் மாறியிருக்க வேணுமுங்க, அப்பா!'

'கதைதான் எப்பவோ தடம் மாறிப் போயி டுச்சுதே, ஆத்தா?”

'ஒ' 'உன்னேட வைரச்சிமிக்கி ரெண்டையும் பொழுது விடிஞ்சடியும் நல்லதனமாகத் திருப்பிக் கொடுத்திட்டாராளுல் தான், ஆதிமூலத்தேவன் என் கிட்டேயிருந்து தப்பமுடியும்!” என்று வீறு கொண்டு முழங்கினர் ராமையாத் தேவர்.

'வைரச்சிமிக்கி என்ளுேடது அப்படின்னு நூறு வாட்டி சொல்லிக்கிட்டு இருக்கிற நீங்க, வைரச் சிமிக்கிகளை எனக்கோசரம் பண்ணியிருக்கிறதாக ஒரு வாட்டி கூட அச்சாரம் வச்சு இது மட்டும் சொல்லவே இல்லீங்களே, அப்பா?” -

'வைரச்சிமிக்கிகளை உனக்காகப் பண்ணுமல், மறுகா யாருக்காகப் பண்ணினேனும், அன்னம்?"

'அந்தத் துப்பு உங்களுக்குத் தெரியும். அப்பாலே, குடிகெடுத்த அந்தப் புறக்குடிப்பாவிச் சிறுக்கி செங்கமலத்துக்குத் தெரியும்!”

சிங்கப்பூர்ச் சீமான் பாக்குக் கடிக்கும் நேரம் வாயடிைத்துப் போய்விட்டார்.