பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

3舒萄

கட்டுப்படுத்திய நிதானத்தோடு விசாரித்தான். "எங்க அப்பாவுக்கு உங்க அப்பா கொடுக்க வேண்டிய கடன் ரூபாய் இருபதாயிரத்துக்கு எங்க அப்பா கோர்ட்டுக் கச்சேரியிலே டிகிரி வாங்கி வச்சி ருக்காங்க, இல்லீங்களா? அதை வச்சு......?' என்று பேச்சை முடிக்க மாட்டாமல் திண்டாடினுள் அன்னம். - "சல்தியாய்ச் சொல்லேன்!’

அன்னம் மனப்பாடம் ஒப்புவிப்பது மாதிரி சொன்னுள்: -

‘எங்க கடனுக்காக உங்க வீடு வாசல், காணி, கரை எல்லாத்தையும் விடிஞ்சதும் ஏலத்துக்கு விடுற துக்கு உத்தரவு வாங்கி வந்திருக்காகளாம் எங்க அப்பன்காரர்!... இந்த ரகசியம் வெளியே காற்றுப் பறியக்கூடாதின்னு சொன்ளுங்க எங்க அப்பா. இதை உங்க காதிலே விழுக்காட்டத்தான் பயந்து பயந்து இந்தப் பின்னிருட்டிலே ஒடியாந்தேனுங்க,' என்று நிறுத்தினுள் அன்னம். புடவைத் தலைப்பு. கண்களை நாடியது. மார்பகம் இளமை துடிக்கத் துடித்தது! -

வீரமணி வாயடைத்து நின்ருன்!

24. ராமருக்கேற்ற சீதை:

- பச்சைமண் அழகாகக் கண் வளர்ந்து, அன்பாகக் கண்மலரும் காட்சியே காட்சி! அந் தக்