பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

அல்லது தன் கனவைச் சிதைத்து ஆளாக்கப்படு வதோ அவனுடைய மன அந்தரங்கத்தைப் பொறுத்த காரியம் என்பதுதான் அவனுடைய சொந்தக் கருத்தாக அமைந்திருந்தது. இந்நிலை யிலே, தன் தந்தை புதிராகப் புதிர் போட்டு விடாமல் இருந்தால் தேவலாமே என்றும் எதிர் பார்த்தான்; கவலையும் அச்சமும் சூழ்ந்திட எதிர் பார்த்தான். இதற்கு மத்தியில், குடும்பத்தின் கவுர வத்தை உயிர்க் கழுவில் நிறுத்தி வைத்துச் சோதிக் கக் காத்திருக்கும் சூழ்நிலையை வேறு முதற் காரிய மாகச் சமாளித்து, சுதந்திரமாகத் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். இது அவனது குடும்பத்தின் மானப் பிரச்சினை!

பெரியவர், முற்றத்திற்குத் திரும்பினர். இடம் மாற்றிக் கட்டிவில் அமர்ந்த வேளையில், தாழ்வாரச் சுவரின் தொங்கலில் பதுங்கி ஒடிய கடுவன் பூனை, மண் சுவரின் சுண்ணும்புப் பூச்சைப் பெயர்த்துத் தள்ளியதன் விளைவாக, அவர் தலை மீது ஒட்டடை யும் தூசும் மண்ணும் சிதறவே, அவர் பழைய குருடி கதவைத் திறடி!' என்ற மாதிரி, பழைய திண் ணைக்கே திரும்ப வேண்டியவரானுர், அமிர்தாஞ்ச னம் நெற்றிக்குத் தாவிற்று. -

'அப்பா!'

'இருக்கேன் மகனே, இருக்கேன்! உன் கிட்டே என்னென்னமோ சொல்லணும்னு இருக்கேன்!”

'சொல்லுங்கப்பா!'