பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 227

ரூபாவுடன் வளைய வந்தபோதுக் கூட, அவனை நான் விரட்டவில்லை; வெகுண்டு அடிக்கவும் இல்லை. ஆனால் இன்று?-அவன் ஏன் அந்தத் துரோகத்தை எனக்குச் செய்ய வேண்டும் 9 அதற்கு ஏன் இந்த சர்மாஜி துணையாயிருக்கவேண்டும்?

ஒருவனுக்கு வேண்டியது பெண்; இன்னொருவனுக்கு வேண்டியதுப் பணம்1-அவற்றுக்காக அவர்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்; அதற்கு என்னைப் போன்றவர்கள் பலியாகிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா வல்லான் வகுத்ததே

வாய்க்கால்’ என்பதற்காக ‘நல்லான்களெல்லாம் அதில்

விழுந்து செத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?

என்ன மோசமான மனிதர்கள், என்ன மோசமான மனிதர்கள்-இவர்களிடம் அனுதாபம் கொள்ள நான் என்ன புத்தரா, ஏசுவா? அப்படியே இருந்தாலும் அவர்களை ஒருப் பொருட்டாக நினைக்காத இவர்கள், என்னையா ஒருப் பொருட்டாக நினைக்கப் போகிறார்கள்?

விடு, கழுதைகளை அவர்கள் பின்னால் உதைத்தால், நான் முன்னால் உதைக்கிறேன்-இதுதானே அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்?

இதற்காக நான் ஏன் வருந்த வேண்டும், இதற்காக நான் ஏன் கலங்க வேண்டும்?

அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் அன்பு காட்டினாலும் திருந்தப் போவதில்லை; அனுதாபம் காட்டினாலும் திருந்தப் போவதில்லை. அப்படிப்

பட்டவர்களை நான் என்ன செய்ய முடியும், ஆத்திரம் தீர

அடித்து நொறுக்குவதைத் தவிர?

அதற்காக, அடித்தால் மட்டும் அவர்கள் திருந்தி

விடவாப் போகிறார்கள்?’ என்று என்னை யாராவது

கேட்கலாம்-திருந்த மாட்டார்கள்தான்-அவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்காக உயிர் இருந்தும் உயிர் இல்லாத