பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 காதலும்கல்யாணமும்

ஆனால்...

அந்தச் செய்தியில் கண்டுள்ள விவரம் உண்மையா யிருக்க முடியாது - ஆம், அது உண்மையாயிருக்கவே முடியாது!

அன்று அவர் சொன்னபடி, அவருடைய மகனே

அவரைக் கொன்றிருக்க வேண்டும் - இதில் சந்தேகமே யில்லை; அவருடைய மகனேதான் அவரைக் கொன்றிருக்க வேண்டும்!

ஐயோ, பணமே! நீ யாரிடம் அளவுக்கு மீறிக் குவிகிறாயோ, அவனை மட்டுமா கெடுக்கிறாய்? அவனைச் சுற்றியுள்ள அத்தனைப் பேரையுமேக் கெடுத்துவிடுகிறாய்! அதற்கு உதாரணம் நான்; என்னுடைய ஊழலின் பிறப்பிடம் நீ! -

நீ இருக்கும் இடத்தில் அன்புக்கும் பண்புக்கும் இடமில்லை பாசத்துக்கும் நேசத்துக்கும் இடமில்லை. ஆசைக்கும் நிராசைக்கும்தான் இடம் உண்டு; மோசத்துக்கும் நாசத்துக்கும்தான் இடம் உண்டு. இல்லாவிட்டால் தருமத்தின் முதல் எதிரியாக உன்னால் இருக்க (D?

அந்தச் செய்தியைப் பார்த்த மாத்திரத்தில் இப்படி யெல்லாம் எண்ணிக் குமுறிய அவருக்கு எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ, உடனே ஒரே தாவாக தாவி மோகனின் ஸ்கூட்டரின் மேல் ஏறினார்; ஒரே உதையில் அதைக் கிளப்பி ராக்கெட் வேகத்தில் அதைச் செலுத்தின்ார்.

அங்கே...

தம்முடையக் கடைசி மரியாதையைச் செலுத்து வதற்காகக் கலெக்டர் பெருமான் அன்புடன் அனுப்பி வைத்திருந்த மலர் மாலை தன் புகழுடலை அலங்கரிக்க, யூத உடலை நீத்த சுகானந்தனார் கூடத்தில் கொலு வீற்றிருந்தார். அந்தக் கூடத்தைச் சுற்றிக் கூட்டமாவதுக் கூட்டம், ஒரேக் கூட்டம் அரசியல் உலகப் பிரமுகர்கள், கலை உலகப் .