விந்தன் 97
‘இப்போதுதான் தெரிகிறது எனக்கு, காதலிப்பதற்கே நாம் லாயக்கில்லை என்று’
‘நாம் என்று சொல்லாதீர்கள்; நான் என்று சொல்லுங்கள்’
‘நன்றி, உன் திருத்தத்துக்கு, ஆனால்...’
“ஆனால் என்ன?”
‘கனி கண்டவன் தோல் உரிக்கக் காத்திருப்பதில்லை என்பது கவிஞன் வாக்கு; கடவுள் வாக்கும், கவிஞன் வாக்கும் பொய்ப்பதில்லை என்பதை நீ உணர வேண்டும்!”
‘'நான் கனி அல்ல; கன்னி’
‘தெரியும்; அதனால்தான் இந்த ஒட்டல் அறைக்கு உன்னை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இல்லாவிட்டால் தெருவிலேயே தோலை உரித்து எறிந்துவிட்டுக் கனியை விழுங்கியிருக்க மாட்டேனா, நான்?”
அவள் சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறாய்?’ என்று அவன் கேட்டான்.
‘ஒன்றுமில்லை. கணிக்கு மட்டுமென்ன, கன்னிக்குக் கூட உங்களைப் போன்றவர்களுக்குத் தெருவே போதும் என்று நினைத்தேன்; சிரிப்பு வந்துவிட்டது’
“சீச்சீ அவ்வளவு மட்டமாகவா நினைத்துவிட்டாய், என்னை? ‘ -
‘'உயர்தரமாக நினைப்பதற்குத்தான் ஒன்றுமே இல்லையே, உங்களிடம்
‘ஏன் இல்லை, எத்தனையோ இருக்கிறது!”
“எத்தனை இருந்து என்ன பிரயோசனம்? அந்த ஒன்று இல்லையென்றால் அத்தனையும் வீணே’
‘எந்த ஒன்று’
‘புத்தி'