பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி • * தாற்பதாண்டுகளுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நாட்டை உலுக்கிய நான்கு பெரும் பஞ்சங்களைப்பற்றி தான் சுருக்கமாக ஒரு பாராவில் கூறி விட்டேன்.. அவற்றில் அடங்கி யிருந்த நரக வேதனையையும் கோரக் கொடுமைகளையும் நானும் வருணிக்க முடியாது ; நீயும் உணர முடியாது. உண்மையில் அதை உணராமலிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவ்வுணர்ச்சியினால் உனக்கு ஆங்கிலேயர்களின் மீது ஆறாத சினமும் நீராத பகையும் மூன் வது நிச்சயம். உனது கன்னி இதயத்தில் அத்தகைய நஞ்சு தோய்வதை நான் விரும்ப வில்லை ... இவ்வாறு நேர் ந்த பஞ்சங்கள் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பாதித் தன; வடநாடும் தென்னாடும் பாதிக்கப் பட்டன், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளைந்த பஞ்சங்களில் இரண்டு கோடி மக்கள் பட்டினிச் சாவுக்கு இரை' யாளார்கள் என்று ஆங்கிலேயரின் அதிகார பூர்வமான கணிப்பே கூறுகிறது. இதனைப்பற்றி இந்திய நாட்டின் பிரபல சரித்திர ஆசிரியரும், "மகராஷ்டி! ஜீவன் உதயம்' 'ரஜபுத்திர ஆதிக்கத் தின் அஸ்தமனம்' முதலிய சரித்திர நாவல்களின் ஆசிரியருமான் ரமேஷ் சந் திர தத் என்றவர் கசப்புணர்ச்சியோடு இவ்வாறு எழுதி யுன்னார்: 5*விக்டோரியா மகாராணி ஆட்சி பீடத்தில் ஏறிய' ஆண்டில் {1837) வட இந்தியாவில் பெரும் பஞ்சம்; அந்தப் பஞ்சத்தில் பத்து லட்சம் பேர் பலியானார்கள். சிப்பாய்க் கலகம் (1857ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர்) நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இருபது ஆண்டுக்காலத்தில் மூன்று பெரும் பஞ்சங் கள் நிகழ்ந்த்ன் , இவற்றினால் பீகார், ஒரிசா, மற்றும் வடமேற்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டன. விக்டோரியா மகாராணி இந்தியாவின் சக்கரவர்த்தினியாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கெஈண்ட ஆண்டிலோ {1877:) சென்னை மாகாணத்தில் மிகப் பெரும் பஞ்சம், அந்தப் பஞ்சத்தில் தென்னிந்தியாவில் ஐம்பது லட்சம் மக்கள் ஆவி துறந் தனர். மகாராணியின் வைர விழாவின் போதோ (1897) துரதிருஷ்டவசமாக இந்திய நாடு எங்கணுமே பஞ்ச ம்....... *: