பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி அடிபட்டு லட்சக் கணக்கான 15க்களை வுங்க நாட்டில் பறி கொடுத்துக் கொண்டிருந்த சென்ற யுத்த கால இந்தியா, ஸ்டெர்லிங் நிதியின் பேரால் எவ்வாறு இங்கிலாந்துக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுத்து வந்ததோ, அதேபோல் தாது வருஷப் பஞ்ச காலத்திலும் இத்திய நாடு இங்கிலாந்துக்குத் தனது செல்வத்தை வாரிக் கொடுத்து வந்தது. இந்தப் பஞ்சத் தினால் மக்கள் ஈசலைப் போல் செத்து விழுந்து கொண்டிருந்த . காலத்தில், அதாவது 1877 ஆம் ஆண்டில், இந்திய நாடு 73 லட்சம் பவுன் மதிப்புள்ள கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தது. அந்த நூற்றாண்டின் இறுதி வரையிலும் பஞ்சம் நீடித்தபோதிலும், ஏற்றுமதி குறைய வில்லை; மாறாக, அதிகரிக்கவே செய்தது. அதே பஞ்ச கால இந்தியா, 1901 ஆம் ஆண்டில் 93 லட்சம் பவன் மதிப்புள்ள உணவு தானியத்தை ஏற்றுமதி செய்தது. ஆனால் இந்த இரண்டு ஏற்றுமதிக் காலத்துக்கும் (1875-1000) இடைப் பட்ட காலத்தில் இந்தியாவில் ஒன்றரைக் கோடி மக்கள் பட்டினிச் சாவினால் இறந்து விட்டார்கள் என்று ஆங்கிலேயரின் அதிகார பூர்வமான கணக்கே கூறுகிறது! இவற்றை அறிந்த பின்னர், மகாகவி தா கூரும் பண்டித ஜவஹர்லால் நேருவும் எழுதியுள்ள வரிகள் எவ்வளவு உண்மையானவை என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். வங்காள பஞ்சத்தின் கோரத்தையும் கொடுமையையும் பிரதிபலிக்கும் பல இலக்கியங்கள் வங்க மொழியிலும், பிற இந்திய மொழிகளிலும், . ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அதைப் போ'ல்வே கோரமும் கொடுமையும் 15குந்த ஒரு பஞ்சம் தமிழ் நாட்டில் திகழ்ந்திருக்கும்போது, அதனையும், அக்காலச் சூழ் நிலைகளையும் பிரதிபலிக்கக்கூடிய இலக்கியங்கள் தமிழில் தோன்றியுள்ளனவா என்ற கேள்வி என்னுள் எழுந்ததுண்டு. இதனால் தொடங்கிய நூல் வேட்டையின் விளைவாக, அந்தப் பஞ்சத்தைப் பிரதிபலிக்க முற்பட்ட, குறிப்பிடத்தக்க இரண்டு தமிழ்நூல்கள் எனக்குக் கிட்டின, ஒன்று சிவகங்கை ஜமீனைச் சேர்ந்த பிரமனூர் கிராமத்தில் வாழ்ந்து வந்த வில்லியப்ப பிள்ளை என்பவர் எழுதிய பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்; இந்நூலைத் தமிழில் தோன்றிய தலைசிறந்த அங்கத இலக்கியம் என்றே