பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. கி. ரங்கராஜன் 89 இதோ மூன்று சிட்டம்!' என்று உற்சாகம் கொப்புளிக்கும் குரலில் நீட்டினள். கொஞ்சம் கரடு முரடாக இருக்கும் ! ஒரே. இரவில் கற்றுக்கொண்டு முடித்தேனே, அதுதான்...... 3 :

  • சாந்தி கங்கிராஜுலேஷன்ஸ் : மகா பெரிய சாதனை ! ஆனல் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா? இருந்தா லும், கையைக் குலுக்கிப் பாராட்டுகிறேன் !' என்று அவள் கையை அழுத்திக் குலுக்கினன் சங்கர். -

'ஆ உஸ் என்று வீரிட்டாள் சாந்தி, தொட்டாலே வலிக்கிறது இரண்டு உள்ளங்கையும் !' சாந்தி 1 ஐயோ!' என்று கன்றிச் சிவந்து ரத்தம் கட்டி விட்ட அந்த விரல்களைப் பார்த்து, பொருமிவிட்டான் சங்கர். இந்தா, உன் சாதனைக்குப்பரிசு!' ஜிப்பா பையிலிருந்து, அந்த விலையுயர்ந்த நகப்பூச்சுக் குப்பியை எடுத்தான். இளநகை விளையாடியது சாந்தியின் இதழில். ரொம்ப நன்றி...... ஆனல்... மன்னிக்க வேண்டும்... இனி மேல், சங்கர், இதெல்லாம் எனக்குத் தேவைப்படாது. ஏற்கனவே இருப்பதைக்கூட என் சிநேகிதிகள் யாருக்கேனும் கொடுத்து விடலாமென்றிருக்கிறேன். ! ? சங்கர் திணறினன்: ' என்ன சாந்தி? இதற்காகப் பந்தயம் கட்டி, இருபத்துநாலு மணி நேரம் போராடி...... x 3 'இதற்காகவா? அப்படியா நினைக்கிறீர்கள்?'சாந்தியின் பிறை நெற்றியில் சிந்தனை வளையங்கள் நெளிந்தன. இல்லை சங்கர்! விதவிதமான நகப்பூச்சுக்காக ஆண்டவன் விரல்களைக் கொடுக்க வில்லை என்ற உண்மை திடீரென நேற்று எனக்குத் தெரிய வந்தது. உழைக்கவும், பிறருக்கு உதவவும் விரலைப் பயன்படுத்த லாம் இல்லையா? எத்தனை பேருக்கு இனிமேல் நான் நூற்கச் சொல்லித் தரலாம்? சொல்லித் தந்து, ஒரு பிழைக்கும் வழியை எத்தனை அபலைப் பெண்களுக்குக் காட்டலாம்? இல்லையா சங்கர்?' ' உண்மைதான் சாந்தி. அவ்வளவும் உண்மை. ஆனல் திடீரென நீ எப்படி மாறினயென்றுதான் ஆச்சரியமாயிருக் கிறது ! ' என்ருன் சங்கர் உணர்ச்சியால் கரகரத்த குரலில், 1. நீங்கள் ஐஸ்கிரீம் வாங்கியபோது, நான் பிச்சை போட்டேனே ஒரு பெண்ணுக்கு ? அவளுக்கு...... அவளுக்கு... ' ' அவளுக்கு? கை இருந்தது. விரல் இல்லை ஐந்து விரலும் அற்று விழுந்துவிட்டன? அவள் நகப்பூச்சுக்கு அழவில்லை! விரலினல்