பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருககு வடிராத திடுக்கிட்டுத் திருதிருவென்று விழித்துக்கொண்டே இருவரும் சுற்றுமுற்றும் பார்த்தனர்-என்ன கண்ணருவிக் காட்சி இது ! கண்ணுக்கெட்டிய தூரத்தில் பேச்சிமுத்து பேச்சுமூச்சற்றுக் கீழே விழுந்து கிடந்தான் ! இசக்கிமுத்து அவனை நெருங்கி இப்படியும் அப்படியுமாக இரண்டு உருட்டு உருட்டிப் பார்த்தான்; ஆசாமி அசைந்து கொடுப்பதாயில்லை. நல்லமுத்து ஒரு பெரும் பிரயத்தனம் செய்து அவனைத் துக்கி உட்கார வைத்தான். அவ்வளவுதான் கபகய வென்று வாயிலெடுத்து விட்டான் அவன் ! இதனுல் அவனுடைய மயக்கம் கொஞ்சம் தெளிந்தது. கண்களை அகல விரித்துத் தனக்கு எதிரே இருந்தவர்களைப் பார்த்தான்; இருவர் நால்வராகத் தோன்றினர்! அடுத்த கணம், ஐயையோ, மாட்டிக்கிட்டேன்! நான் இந்தப் போலீசுக்காரப் பயலுங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்!' என்று அலறிக்கொண்டே அவன் எழுந்து ஒட முயன்ருன் : முடியவில்லை ! : ' என்ன தம்பி, இந்த லோகத்திலேதான் இருக்கியா? இல்லே, வேறே எந்த லோகத்திலாச்சும் இருக்கியா? ' என்று அவனுடைய தலையைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கிக் கேட் டான் நல்லமுத்து. அவனுடைய கேள்விக்குப் பேச்சிமுத்து பதில் சொல்ல வில்லை. அதற்குப் பதிலாக, ' கபர்தார் ! கபர்தார்!’ என்று அவன் சம்பந்தமில்லாமல் உளறினன். கபர்தார் 1 என்ற வார்த்தையைக் கேட்டதும் இசக்கி முத்தும் நல்லமுத்தும் ஒருவரையொருவர் ஜாடையாகப் பார்த் துச் சிரித்துக் கொண்டனர். -

  • என்ன ೨ನಡೀT, விசயம் புரிஞ்சுதா? " என்று கேட்டான். இசக்கிமுத்து, . . . . .

" ரொம்ப நல்லாப் புரிஞ்சுது!" என்று தலையைப் பலமாக ஆட்டின்ை நல்லமுத்து. அதற்குள் ஒரளவு சுய உணர்வு பெற்ற பேச்சிமுத்து தட்டுத்தடுமாறி எழுந்து நின்று இசக்கிமுத்தையும் நல்லமுத்தை யும் மாறி மாறிப் பார்த்தான். . . . . . . . . . . . . "என்ன, தம்பி! நல்லாயிருக்குதா, ஞாயம்?" என்று அவனுடைய தோளப்பிடித்துக் குலுக்கியவண்ணம் கேட்டான் நல்லமுத்து: - . . .