பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் Ig5 பேச்சிமுத்து தலையைச் சொறிந்துகொண்டே, ' குரலைப் பார்த்தா நல்லமுத்து அண்ணனட்டம் இருக்குது; ஆன பார்க்கிற பார்வைப் பார்த்தா போலீசு ஜவானட்டம் இருக்குதே ? . என்று முணுமுணுத்தான். பயப்படாதே, நல்லமுத்து அண்ணன்தான் என்ருன் நல்ல முத்து. நல்லமுத்து அண்ணன ? நல்ல சமயத்திலே வந்து சேர்ந் தேப்பா ! இதோ, உன் பக்கத்திலே நிற்கிருரே, இவரு யாரு ? ' இசக்கிமுத்து அண்ணன் ' அப்படியா சங்கதி? நீங்க போலீசு ஜவானுங்களாக்கும்னு நெனச்சி நான் பயந்தே போயிட்டேன் 1’ என்ருன் பேச்சி முத்து. ே அப்படிப் பயந்துகிட்டு இந்த ஜோலிக்கு ஏன் போகணும் தம்பி ? ’’ ' என்னமோ போனேன் மனசு கேக்குதா?” ஆமாம், ஆறுமாசம் உள்ளே தள்ளி வச்சாத்தானே மனசு கேக்கும் ! . " அப்படின்ன நீ என்னைப் போலீசு ஜவானுங்ககிட்ட காட்டிக் கொடுத்துடப் போறியா? ' பின்னே, அப்போத்தானே உனக்குப் புத்தி வரும்?" அண்ணே, அண்ணே ! உன் காலிலே விழுந்து கேட்டுக் கிறேன், அண்ணே ! நீ என்னை வேணும்னு காட்டிக்கொடு; அந்தக் கபர்தார் ஐயா வை மட்டும் காட்டிக் கொடுத்திடாதே ” ' கொடுத்தா என்ன தம்பி ? ' "ஐயையோ, என் தலை போயிடும்! அவரு கொடுக்கும்போதே சொல்லித்தானே கொடுக்கிருரு- அடே, உன்காசு எனக்குப் பெரிசில்லே என்னமோ கஷ்டப்பட்டுக் களைச்சுப்போறியேன்னு கள்ளத்தனமா இந்தச் சாராயத்தைக் காய்ச்சிக் கொடுக்கிறேன். குடிச்சிட்டுப்போய்ப் பேசாம குடிசையிலே படுத்துக்கிடணும். வழியிலே தப்புத் தண்டாவுக்குப்போய்ப் போலீஸ்காரப் பயலுங்க கிட்ட மாட்டிக்கிட்டியோ, என் பேரை வெளியிலே சொல்லக் கூடாது. அடியோ, உதையோ, குத்தோ, ஜெயிலோ எதுவா யிருந்தாலும் நீதான் அனுபவிச்சித் தீரனும். அதிலே என்ன யும் மாட்டிவிட்டியோ, உன் தலை என் புழக்கடையிலே கிடந்து