பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிந்தன் 20 + முன்னலேயே சொன்னேன, இல்லையா ?-iளு என்னுடைய கோபத்துக்கு ஆளாகாதே, போ! ' "இந்த அக்கிரமத்தை நீங்கள் நிறுத்தாதவரை என் உயிரே போவதாயிருந்தாலும் சரி, நான் இங்கிருந்து நகர மாட்டேன் !' அட, பெரியசீமான் இவரு? போடா, நாயே இந்தக் கபர்தார் கண்ணுயிரம் கிட்டவா வந்து, நீ கணக்குப்பண்றே, கணக்கு ? இந்த இடத்தைவிட்டு மரியாதையாய்ப் போறியா? இல்லே, நானே கழுத்தைப்பிடிச்சி வெளியே தள்ளட்டுமா ? ' என்று அவர் சிம்மநாதம் செய்தார். அவ்வளவுதான்; மகன் ஆட்டுக்குட்டியாக அடங்கி நின்ற இடத்திலேயே நின்றன். கபர்தார் கண்ணுயிரம் தம்கண்கள் ஜிவ் வென்று சிவக்க. மீசைமுறுக்குக் கலைந்து துடிக்க, அவனை ஏறிட்டுப்பார்த்தார். அப்பொழுதும் அவன் அசைந்துகொடுக்கவில்லை ! அவ்வளவுதான்; பளிர், பளிர் என்று இரண்டு அறைகள் அவனுடைய கன்னத்தில் மின்னலிட்டன. அவன் அசந்து போன்ை! அதற்குப் பிறகு அவன் அங்கே நிற்கவில்ல்ை: கன்னத்தைத் தடவிக் கொண்டே தன் அறைக்கு வந்து விட்டான். கள்ளச் சாராய வியாபாரம் எந்த விதமான இடைஞ்சலு மின்றி வழக்கம் போல் இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடந்து முடிந்தது! பத்து மணிக்குப் பிறகு புழக்கடை அறையை பூட்டிக் கொண்டு வந்த கபர்தார், நக்கீரனின் அறைக்குள் ஆவேசத் துடன் நுழைந்தார். அவருடைய ஆவேசத்தைக் கண்டதும் அவன் தன்னை யறியாமலே எழுந்து நின்றன். - 'எனக்கு முன்னமேயே தெரியும். நீ இப்படி ஏதாச்சும் 'தத்துப் பித்து'ன்னு உளறுவேன்னு! பேசாம நான் சொல்ற தைக் கேளு? உனக்கும் எனக்கும் இனிமே சரிப்பட்டு வராது: பட்டணத்துப் படிப்புப் படிச்சி உன் புத்தி கோணலாப் போயி டிச்சு காத்துள்ளபோதே தூத்திக்கனும் எங்கிருப் போல, கள்ளுக்கடையை எடுத்திருக்கிற இந்த நாளிலேதான் நாலு காசு சம்பாதிக்கணும்னு நான் இருக்கேன். அதுக்கு இடைஞ் சலா நீ இருந்தியோ, எனக்கு ரொம்பக் கோவம் வரும்-.