பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸவாதி' 20 அரங்கேற்றம் 1lடாரென்று ஒரு வெடிச்சத்தம். கார் கொஞ்ச தூரம் சென்று ஒரு குலுக்கலுடன் நின்றது. உள்ளே இருந்தவர்கள் ஓர் ஆட்டத்துடன் சாய்ந்தார்கள். சாமாவின் கைகள் தம்புராவை அணேத்தன. அந்த அதிர்ச்சியில், டிரைவர் கீழே இறங்கினன். முன்பக்கமும் பின்பக்கமும் சென்று வண்டியைப் பரிசோதித்தான். ' என்னப்பா? " என்ருர் வேம்புவையர். ' பின் சக்கரம் பர்ஸ்ட் ஆயிட்டுதுங்க ’’ தலையைச் சொறிந்தபடி அவன் நின்ருன். அட ராமா! வேம்புவையர் இடதுகையினால் முகவா யைத் தாங்கிக்கொண்டார்.

  • இப்போ என்ன செய்யறது : ' ' கொஞ்சம் இருங்கசாமி. ஸ்டெப்னி இருக்குதான்னு பார்க் கறேன். வண்டியிலே வச்ச ஞாபகம் ' -

"வேறே சக்கரம் மாட்டறேங்கறயா? ' - ' ஆமாங்க. அதுக்குக்கூட ஒரு அரை அவர் ஆகுங்க ' 'அட கஷ்டமே சரியா ஆறு மணிக்கு அங்கே இரு ணுமே? - - - டிரைவர் வண்டியின் பின்பக்கத்தைத் திறந்து பார்த்த கவலைக்குறியுடன் மறுபடியும் வந்தான். - அதுகூட காணலிங்க! "