பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்வாதி 309 கண்டு கொண்டிருந்தார். சாமாவும் லேசுப்பட்டவனல்ல. அருள் போல அவனுக்கு வித்தை வாய்த்திருந்தது; ஸ்வயம் பிரகாச முள்ள சுடர்விளக்கைத் தூண்டிவிட அருமையான குருநாதரும் வாய்த்தார். இவ்வளவு நஷ்டத்திலும் அது ஒருபெரிய அதிர்ஷ் டம் என்பது வேம்புவையரின் தீர்மானம். உடல்நிலை சரியாக இருந்திருந்தால் குருநாதர் கூட இன்று வந்திருப்பார்; பெருமை யாகவும் இருந்திருக்கும். ஆனல் வேம்புவையரின் முகத்தில் தான் துரதிர்ஷ்டம் கரி யைத் தடவி விட்டதே ? ' என்னைவிட்டு ஒடவா பார்த்தாய்? என்று தரித்திர தேவதை அவர் கண்ணெதிரே நின்று நையாண்டி செய்து சிரிப்ப தைப்போல வேம்புவையருக்குத் தோன்றியது. லக்ஷ்மியின் கடைக்கண் கடாட்சம் பெறவேண்டிய இந்த நேரத்தில், எங்கோ, நடுவே ஒரு குக்கிராமத்துச் சாலையோரத்தில் சங்கிலிக் கருப்பனின் பார்வையில் உட்கார்ந்து இருக்கிருயே, என்று அவர் உள்ளம் வெதும்பி உள்ளம் குன்றியது. கச்சேரி இந்நேரம் நடந்திருந்தால் ? முடிவில் கைநிறைய தானத்துடன் திரும்பலாம். அந்தப் பெரிய மனிதர் நிச்சயமாக சாமாவின் சங்கீதத்தைக்கேட்டுப் பிரமித்துப் போவார். நல்ல செல்வாக்குள்ள அவர் மட்டும் மனதுவைத்து சிபாரிசு செய்தால் இன்னும் நிறையக் கச்சேரிகள், நிறையப் பணம்... ! இன்று தனக்கும் மகனுக்குமாகக் கடனில் வாங்கிய வேஷ்டி துணிமணிகளுக்கு அலட்சியமாகப் பணத்தை வீசலாம். மேலே பணம் சேர்த்தால் கிராமத்திலேயே முதலியா ரிடம் சொல்லி நல்லதாக ஒரு பத்துப்பதினைந்து குழி நஞ்சை வாங்கலாம். இரண்டு வருஷத்துக்குள் களஞ்சியம் நிறைய நெல், வீடு நிறையச் செழுமை, செல்வம், மகிழ்ச்சி ! தரித்திரத்தையும் மூட்டுப்போட்ட பழந்துணிகளையும் நிரந்தரமாக உதறிவிடலாம். சே ! எல்லா ஆசையும் பாழ் பாழும்விதி இம்மாதிரி செய்து விட்டதே ? பளிச்சென்று ஒளிவீசி அந்த இடத்தை நிறைத்தது. காரின் முன் விளக்குகள் தான் ! நல்லவேளையாக அந்த வாடகைக் காருக்கு முன்னதாகப் பணம் கொடுத்தாகி விட்டது. எப் போதோ அவர் மாமனர்போட்ட கடுக்கன் இந்தக்கார் சவாரியில் கரைந்துவிட்டது. . . . . இருட்டிலே எத்தனை நேரம் உக்காந்திருப்பீங்க, சாமி!. இப்படி வாங்க, பூச்சிபொட்டு இருக்கப்போகுது. உங்களுக்கா கr-14 -