பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இராவணுகாரம் களைப் பார்த்து, ' இத்தோடு உங்கள் மறியலை முடித்துக் கொண்டு போங்கய்யா! இனியும் இருந்தால் ஏதேனும் விபரீத மாகப் போகிறது ”” என்று மெல்லக் கூறி விட்டுக் கூட்டத்தை நோக்கி, ' சரி...சரி போங்க கலைந்து ’’ என்று அதட்டிக் கொண்டே போயினர். கூட்டம் மெல்லக் கலையலாயிற்று. அனந்தனின் துணிச்சலான செய்கையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பத்மநாபன், கைது ஆகக் காத்திருந்த தொண்டர் களை நோக்கி, ' சரி; வாருங்கள் நாம் முகாமுக்குப் போவோம் என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை விட்டு மேற்கே நடக்க லானர். அவர் வாய், அனந்தனுக்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும். ஆண்டவனே !’ என்று முணு முணுக்கலாயிற்று.