பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 உள்ளும் புறமும், அழைச்சிங்கன்னும் அவர் சொன்னுரு. அதனுலேதான் முன்னே பின்னே எனக்குப் பழக்கமில்லேன்னலும் பரவாயில்லேன்னு நான் வந்தேன். உங்களைப் பார்த்தால் நல்லவராய்த்தான் தோணுது. ஆனுல் அந்தம்மா என்ன இப்படி அவமானம் செய்ய வேண்டியது அவசியம் தான? ' என்று படபடத்தாள். ரமணன் தேள் கொட்டிவிட்டவன் போல் மனவியின் பக்கம் திரும்பி " நீ எதுக்கப் பேசறே. சீதா ? அவன் கிட்ட ஏதானும் சொல்லணும்னு நானே சொல்லிக்கறேன்’ என்று ஆத்திரமாய் முணுமுணுத்தான். முத்து மன்னிச்சிடுங்க மிஸஸ். ரமணன்' என்றபோது ரமணனின் முகம் பின்னும் விகாரமாயிற்று. சூழ்நிலையில் படிந்த மெளனம் இனிமையாக இல்லையே என்று முத்து தவித்த நேரத் தில் ஒட்டல் சிப்பந்தி அறைக்குள் நுழைந்து உணவுப் பொருள் களை அவர்கள் முன் இட்டுச் சென்ருன், 'சாப்பிடுங்க எல்லோரும் ' என்ற அவனது உபசரிப்பின் நயத்திலும் பிறகு உணவு உட்கொள்ளும் கவனத்திலும் நிலைமை யின் சங்கடம் சிறிது விடுபட்டது. ஆனல் ரமணனின் முகத் தில் சிடுசிடுப்பு மாறவில்லை. மனைவியின் பக்கம் திரும்பி, சத்தம் போடாமல் உனக்குச் சாப்பிடத் தெரியாதா? என்று அவன் காரணமின்றிக் கடிந்தகொண்டபோது தான், சீதா தன்னேடு அப்படி நேராகப் பேசிவிட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை என் பதை முத்து புரிந்துகொண்டான். மனைவிக்கு எல்லா உரிமை யும் உண்டு என்று சொன்னவனின் உண்மையான மனப் பான்மை இப்படியா எத்தகைய போலி இந்த ரமணன் முத்து வின் உதட்டோரம் சுழித்துக்கொண்ட ஏளனப் புன்னகை அடுத்த கணமே வற்றிப்போயிற்று. நான் மட்டும் போலி யில்லையா?" மகாத்மா மகாத்மா என்று கதைக்கிருனே, அவர் கொள்கை கள் எங்கே? அவன் எங்கே? பொருள் ஈட்டுவதில் குற்றமில்லை தான். ஆஞ்ல், செல்வர்களின் செல்வம் அவர்களிடம் ஏழை யரின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள பொருளாக இருப்பது என்று கூறியிருந்தாரே அந்த மகான் ! அவன் தன் செல்வத்தால் எந்த ஏழையின் துயரைக் களைந்தான்? அதுகூடப் போகட்டும் : அவன் பொருள் தேடிய வழிகள் ! எத்தனை சந்தர்ப்பங்களில் தொழிலில் மோசடி செய்திருக்கிருன் ! ஏற்றுமதி செய்த ஏலத் தில் எலிப்புழுக்கை சேர்த்த செயல் அத்தகைய எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஒன்றுதான். அவ்வாறெல்லாம் நேர்மை தவறியவர்கள் சத்திய வடிவினரின் பெயரில் பொதுக் கட்டிடங் கள் கட்டுவதுமட்டும் போலியில்லையா? .