பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் 9 நிலம் இத்யாதி வகையரு. இது மட்டுமல்ல, ஒரு பென்ஷன் பெற்ற ஸ்ப் ரிஜிஸ்திரார் விச்வநாத சிரெளதி : இவருக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலும், இறந்து போன ஸ்ளுதன. உண்மைகளிலும் அபார நம்பிக்கை. இதை யறிந்து நடப்பவர்கள் தான் அவருடைய பக்தர்கள். அவருக்கு ஒரு பையன், பெயர் ராமநாதன். எம். ஏ. படித்து விட்டு கலெக்டர் பரீrை கொடுக்க விருந்தவன். ஏதோ பைத் தியக் காரத்தனத்தினல்- இது அவர்கள் வீட்டிலும் அக்ரகாரத் திலும் உள்ள கொள்கை-சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு விட் டான். பையனுக்கு இதிலிருந்த பிரேமையை ஒரு நல்ல சம்பந்தத் தில் ஒழித்து விடலாம் என்பது சிரெளதியின் நம்பிக்கை. பிள்ளை யின் பேரிலிருந்த அபார வாத்ஸல்யத்தின் பயன். 2 சேரியிலே கருப்பன் ஒரு கிழட்டு நடைப்பிணம். 60 வயது. பெரிய நயினரின் தோட்டக்காவல். இதில் ஒரு ஸ்வாரஸ்யம். கருப்பன் சிறு பிராயத்தில் தெரியாத் தனத்தினலோ, ஐயரவர்கள் இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறபடி, பறக்கிறது ” ஞலோ, ஒரு நாள் இரவு, அக்ரஹாரத்தில் இருக்கும் தெப்பக் குளத்தில் இறங்கி ஒரு கை தண்ணிர் அள்ளிக் குடித்து விட்டான். கோயில் தெய்வத்தின் உலாவுப் பிரதிநிதியான சுப்பு சாஸ்திரிகள் கண்டு விட்டார். அக்ரஹாரத்தில் ஏக அமளி. அப்பொழுது சிறுவனுக விருந்த விச்வநாத ச்ரெளதி, தன்னை மீறிய கோபத்தில் அடித்த அடி கருப்பனைக் குருடாக்கியது, விளையும் பயிர் முளையிலே தெரியாதா? : . ஆனல் ச்ரெளதி இளகிய மனம் உடையவர். கருப்பனுடைய ஸ்திதிக்கு மிகவும் பரிதபித்து தோட்டத்தில் காவல் தொழிலைக் கொடுத்தார். கல்யாணம் செய்து வைத்தார். தோட்டத்திலே குடிசை கட்டிக் கொடுத்தார். பிறகு தங்கக் கம்பியாகி விட்டான் என்று எல்லோரிடத்திலும் சொல்லுவதில் வெகு பிரேமை. 3 அதெல்லாம் பழைய கதை. கருப்பன் குருடனகி விட்டால் குழந்தைகள் பிறக்காதா? முதலில் ஒரு ஆண் குழந்தை. அவன் பெயர் பாவாடை, ஆண்டை சின்ன சாமியும் ஏறக்குறைய இதே காலத்தில் தான் பிறந்தான். இராமநாதன் சில சமயங்களில் தோட்டக் காட்டிற்கு வரும்