பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 0 புதிய நந்தன் பொழுது பாவாடையுடன் கேணியில் முக்குளித்து விளையாடு வதிலும் மரக் குரங்கு விளையாடுவதிலும் பரம உத்ஸ்ாகம், அதெல்லாம் பழைய கதை. இரண்டு பேரும் வித்தியாசமான இரண்டு சமூகப் படிகளின் வழியாகச் சென்ருர்கள். இரண்டு விதமாகக் கண்டார்கள். பரமண்டலங் களிலிருக்கும் பிதாவாகிய கர்த்தரின் நீதிகளை, ஆதனூரில் பரப்பும்படி ரெவரெண்ட் ஜான் ஐயர் ஒரு தடவை ஆதனூர் சேரிக்கு வந்தார். பாவாடையின் புத்தி விசேஷத்தைக் கண்டு, அவனைத் தம் மதத்தில் சேர்க்க அனுமதித்து விட்டால், பெரிய பண்ணே மாதிரி ஆக்கி விடுவதாக ஆசை காட்டினர். கருப்பனுக்கு, தன்மகன், இங்குருசி (English) படிக்க வேண்டு மென்று ஆசை. நீட்டு வானேன் ? பாவாடை ஜான் ஐயருடன் சென்ருன். ரெவரெண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிருஸ்தவர். முதலில் போர்டிங்கில் போட்டுப் படிக்க வைத்தார். பையன் புத்தி விசேஷம், மிகுந்த பெயருடன் 10 கிளாஸ் படிக்கும் வரை பிரகாசித்தது. இன்னும் பிரகாசிக்கும். பர மண்டலங்களிலிருக் கும் கர்த்தரின் விதி வேறு விதமாக இருந்தது. ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரிலில்லி என்ற பெயர். நல்ல அழகு. அவளும் அந்த மிஷன் பள்ளிக் கூடத்தில் ஆண் பிள்ளைகளுடன் படித்தாள். எல்லாவற்றிலும் முதல் மார்க் எடுக்கும் பாவாடை யிடம் (இப்பொழுது அவனுக்கு தானியேல் ஜான் என்ற பெயர்) சிறிது பிரியம் நட்பு, வரவரக் காதலாக மாறியது. கிருஸ்தவ சமுதாயத்தில் இந்துக் கொடுமைகள் இல்லை யென்று ஜான் ஐயர் போதித்ததை நம்பி, மனப்பால்குடித்த ஜான் தானியேல், ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான். ஜான் ஐயரவர்களுக்கு வந்து விட்டது பெரிய கோபம். பறக் கழுதை, வீட்டை விட்டு வெளியே இறங்கு ' என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினர். - மனமுடைந்த தானியேலுக்குப் பாழ்வெளியாகத் தோன்றி யது உலகம். இந்த மன நிலைக்கு மதம் தானே சாந்தி என்கிருர்கள். கிருஸ்தவகை இருந்த பொழுது வேத புத்தகத்தை நன்ருகப் படித்திருந்தான். சுவாமியாராகப் போய் விட வேண்டுமென்று கத்தோலிக் மதத்தைத் தழுவி, சுவாமியார் பரிட்சைக்குத் தேர்ந் Qg5@#äljulit gro Liggigiris (Novice Brother) Father