பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 認95 நினைத்தது. இந்தியாவுக்கென்றிருக்கும் தத்துவங்களை நம்பா மல் அந்நிய நாட்டுத்தத்துவங்களை வீரவணக்கம் புரியும் தீவிர வாதிகளால் என் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படுவதை என்ன வென்று சொல்வது? சீனவில் இந்தியத் தூதரக அதிகாரிகள் கொடுமைப் படுத்தப்பட்ட செய்தியும் அதே பத்திரிகையில் வந்திருந்தது. அதையும் அந்தப் பெண்மணி எனக்குச் சுட்டிக் காட்டினுள். நாட்டுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த சொந்த நாட்டுத் தேசபக்தியை மறந்து எந்த நாட்டுத் தேசபக்தியையோ முத லாகச் கொண்டு இந்த நாட்டைப் பாழாக்குகிறவர்களை எண்ணி எண்ணிக் குமுறினேன். வேறுநாட்டுத் தத்துவங்களைப் பருகி வாழும்படியான ஈன நிலைக்குக் கீழிறங்கும்படி-எனது நாட்டில் கங்கை இன்னும் வற்றி விடவில்லையே? விமானத்தில்-முறையாக வழங்கப்படும் டிஸ்எம்பர்கேஷன்” கார்டு வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் எண்ணைக்குறித்து சிடிசன் என்பதற்கு நேரே இந்தியன் என்று ஒவ்வொரு கேபிடல் எழுத்தாக எழுதும்போது என் மெய்சிலிர்த்தது. எங்கிருந்தா லும் நான் இந்தியன் தான். இந்தியாவின் கஷ்ட நஷ்டங்களில் எனக்கும் பங்கு உண்டு. மனப்பான்மையிஞலும் சிந்தனையின லும் கூட நான் இந்தியன். - வெளிநாட்டில் எங்காவது இருபத்தைந்து முப்பது மாடிக் கட்டிடங்களைக் கண்டால் இப்படி ஒரு கட்டிடம் இந்தியாவி லும் கூட எங்காவது தோன்றியிருக்கும், தோன்ற வேண்டும் ” என்று நினைப்பேன். வெளிநாட்டில் அழகிய விரிவான சாலை களைப் பார்த்தால் இப்படி அழகிய பெரிய சாலைகள் இந்தியா வில் வரவேண்டும் என்றெண்ணுவேன். வாழ்க்கைத்தரம் உயர்ந்த வெளிநாட்டு மனிதனைப் பார்த்தால் இந்தியனின் வாழ்க்கைத் தரமும் அப்படி உயர வேண்டும் என்றெண்ணுவேன்.

  • லுக்கிங் டயர்ட்.ஹேவ் ஸம் டிரிங்...' என்று ஆதர வாக வந்து கூறினுள் விமானப் பெண் .

நோ...தாங்ஸ்... அவள் சிரித்துக்கொண்டே போய் விட் டாள். விமானத்தில் மெல்லிய இசை எழுந்தது. சென்னை நில்யத்தில் இறங்குவதற்கான அறிவிப்பும் இந்திய நேரமும் கூறப்பட்டன. சில விநாடிகளில் விமானம் இறங்கியது. தாய் நாட்டு மண்ணில் இறங்கும் போது தான் எத்தனை பெருமிதமாக இருக்கிறது? -