பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 301 கிடந்தன. இரயில்கள் மேலும் போவது உறுதியில்லை என்ற நிலையை அறிந்தோம். கார்டு ஒவ்வொரு கம்பார்ட்மெண் டாக வந்து கதவுகளேயும் ஜன்னல்களையும் ஜாக்கிரதையாக மூடிக் கொண்டு உள்ளே இருக்குமாறு கூறிவிட்டுப் போய் விட்டார். பார்லிமெண்ட் உறுப்பினர், கார்டைத் தன்னைக் கட்டி ஸ்டேஷனிலிருந்து உள்ளுர் ஆந்திர பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவருக்குப் ஃபோன் செய்து வரவழைத்து அவரோடு காரில் ஊருக்குள் போய் விட்டார். கர்ப்பிணியின் முகத்தில் பீதி தெரிந்தது. கெளபாய் சூட் பையன், அடாடா! நாளன்றைக்கு இண்டர்வ்யூ வீணுகி விடுமே ? ' என்று அலுத்துக் கொண்டான். விஜயவாடா ஸ்டேஷனில் தொடர்ந்து நடந்த கலகங்களின் சின்னமாக வீசி எறியப்பட்ட கற்கள், பாதி எரிந்த ரயில் போகி கள், எல்லாம் தென்பட்டன. ஸ்டேஷனில் சரியாக விளக்குள் எரியவில்லை. பல இடங்களில் விளக்குகள் கல்லால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. கர்ப்பிணியின் பையன், "பசிக்கிறது என்ருன். அவள் பையனைக் கோபித்துக் கொண்டாள். கெளபாய் குட் பையனிடம் கொஞ்சம் பழங்களும், பிஸ்கட்டும் இருந்தன. அங்கேயே வைத்துச் சாப்பிடக் கூசியவகை அவன் அதை எடுத்துக் கொண்டு காரிடார் பக்கம் போய்விட்டான். பிறர் பசித்துக் கிடக்கும்போது தனியே தின்பதற்கு எடுத்துக்கொண்டு ஓடும் அந்த மனப்பான்மை என்னைத் துணுக்குறச் செய்தது. என்னிடமோ, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணிடமோ சாப்பிட ஒன்றுமில்லை. வெளிநாடுகளில் சகபிரயாணி புகைபிடித்தால் கூட. விகரெட் என்று அருகிலிருப்பவரையும் வேண்டிவிட்டுப் புகைக்கத் தொடங்கும் பழக்கத்தைக் கண்டிருக்கிறேன். இந்தியர் விலோ அருகிவிருப்பவர்களுக்குக் கொடுக்கத் தயங்கித் தனியே தின்பதற்கு எடுத்துக்கொண்டு ஒடுகிறவர்களைக் காண்கிறேன்: இந்த நாட்டிலா கங்கை ஒடுகிறது? என்று மனம் கொதித்தது; கீழே இறங்கிப் போய், உணவுக்கு ஏதாவது வழி செய்ய முடியுமா? எனது கம்பார்ட்மெண்டில் ஒரு கர்ப்பிணியும் அவள் பையனும், நானும் பட்டினி ' என்று கார்டிடம் கேட்டேன். இப்போதுள்ள நிலையில் எதுவும் முடியாது’ என்று கைவிரித்து விட்டார் அவர். . - நகருக்குள் போய் வாங்கவும் முயலாதீர்கள். நிலைமை ஆபத்தானதாக இருக்கிறது' என்று என்ன எச்சரிக்கவும் செய்தார் கார்டு. துணிந்து நாகை நகருக்குள் போகலாம்