பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மடவார்ப் பொறை விட்டது. இது இயற்கைக்கு விரோதம் இல்ல்ைதான். ஆனல் வழுக்குகிற பாசத்திற்கு நியாயம் தேவை இல்லை. இல்லாமல் போன என் தாய் நீராக என் கண்ணில் நிறைந்தாள், நெஞ் சோடு கிளர்ந்து, நெடு மூச்சாக விரிந்தாள். அப்பாவின் மூச்சும் ஒரு சுழிப்பில்தான் நின்று கொண்டி ருந்தது. என்னைப் பார்த்ததும் ஒரே திருப்தி. அவரிடமிருந்து பறந்த உயிர்ப்பறவைக்கு என் வருகையே இறக்கைகளாகி விட்டன. சர்க்காருக்குப் பென்ஷன் லாபத்தோடு எனக்கும் ஒரு லாபம். அவர் சம்பாதித்து வைத்திருந்த லக்ஷ ரூபாய் ஆஸ்தி எனக்குக் கிடைத்தது. பணம் பத்தும் செய்யும் என்பார்களே ! வாழ்க்கையின் அரிச்சுவடி முதல் ஆனர்ஸ் வரையிலுள்ள எல்லா வழித்துறை களும் சாமர்த்தியங்களும் எனக்கு வந்து விட்டன, வாழ்க் கையைப் பழித்ததற்கு நான் சுமக்கிற பொதியாகவும் இருக்க லாம் இது - - செளகரிய வாழ்க்கையில் ஒரு தினவு ஏற்பட்டிருப்பதை நாளாவட்டத்தில் கண்டேன். வாலிபத்தில் விடுதலை வேட்கை யின் இறக்கைக்குக் கீழே மறைந்து கிடந்த தாம்பத்ய வேட்கை இந்த வயதில் வெளிப்பட்டுச் சீறுவானேன்? வாலிபத்தில் இறங்கிய விதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மட்கிப் போகாமல் எப்படி முளை நீட்டிக் கிளைவிடுகிறது ? முதலில் ஆச்சர்ய ரளிகளுனேன். பின்னர் காலம் கடந்த வேட்கையை விரட்டத் தாயுமானவரைத் துணைக்கு அழைத் தேன். கருணைக்குரல் எடுத்துப் பாடினர் : "மதியுங் கங்கையுங் கொன்றையும் மத்தமும் பொதியுஞ் சென்னிப் புனித கின் பொன்னடிக் கதியை விட்டிந்தக் காமத்தி லாழ்ந்தவென் விதியை எண்ணி விழிதுயி லாதன்றே,’ - தாயுமானவர் விண்டதைக் கண்டவர். காமத்தில் ஆழ்ந்த விதியைக் கிழித்துக் கர்மேச்வரனைக் கண்டவர். விதியின் கை விளையாட்டுப் பண்டமான நான் இறைவனை அழைத்த போதெல்லாம் காம ஸ்வரூபிணிய்ே காட்சி தந்தாள். தாயு மானவர் குரல் ஒடுங்கினர். என் கிழட்டு உடலிலிருந்து இளமைக் குரல் வீங்கி எழுந்தது. ஒரு பெண் வேண்டும். நான் பணக்காரன். எனக்கு நூறு வயதானலும் பதிலுை வயது அழகுப் பெண் கிடைப்பாள். ஆனல் இந்த இடத்தில்