பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசவன் 3.11 தான் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சிந்தித்தேன். ஏதோ நெருக்கடியால் எனக்குக் கழுத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு வாழ்நாளெல்லாம் கண்ணிர் வடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுல் எனக்கு இன்பம் கிடைக்காது. அவள் என்னை மனப்பூர்வமாக விரும்புபவளாக இருக்க வேண்டும். எவளாவது கண்ணுள்ளவள் அப்படி விரும்புவாளா? எழுபது வயதுத் தலைவர் ஒருவரை விரும்பிய பெண்ணும் இந்த த் தமிழ் நாட்டில் தானே இருந்தாள்? அந்த வகையில் இன்னெரு பெண்ணும் இந்தத் தமிழகத்தில் இருக்க மாட்டாளா, என்ன ? ஒரு பள்ளி ஆசிரியர் அழகே உருவான தன் பெண்ணை எனக்குக் கொடுக்க முன் வந்தார். அவள் நன்ருக வாசித்த வளாம். ஏழு பெண்களுக்கு முன் பிறந்த சீதேவியாம். பணம் இல்லாத காரணத்தால் இருபத்தைந்து வயதுவரை கன்னியாக இருக்கிருளாம். வயதானவர்களுக்கு இப்படி இடங்களில்தான் பெண் கிடைக்கும். பணக்காரக் கிழவர்களின் ஆசைத் தாமரை மலர்வதற்கு, அடிமட்டத்தில் வறுமைச் சேறு இருப்பது அவசியம்தானே ? ஆல்ை ஒரு நிபந்தனை போட்டிருந்தேன். அந்தப் பெண்ணுேடு நான் தனிமையில் பேசிய பின்னர்தான் என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இயலும் என்று. அதுவும் நான் இருக்கும் இடத்திற்கு அவள் வரவேண்டும் என்பது நிபந்தனையின் முதல் ஷரா. வாத்தியார் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொண்டார். எனக்கு ஒர் உறுத்தல். நான் அவர்கள் ஏழ்மையை, நெறிகளைக் கடக்கும் தோணியாக உபயோகப்படுத்திக் கொள்கிறேனே? எனக்கே சிரிப்பு வந்தது. நெறியைத் தின்று உணர்வைக் கொழுக்க வைத்திருக்கிற எனக்கு இந்த ஞானேதயம் வருவானேன்? ஸார் !......' வாசலில் அலைந்த மென்குரல் என் சிந்தையைத் தேய்த்தது. எழுந்து வாசலுக்குப் போனேன். அழகு அள்ளிய இளமையில் புன்னகையை மலர விட்டபடி நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். இருக்கும் இடம் தேடி வந்த தீனியைக் கொழுத்த கிடா தின்னவேண்டியது தானே? மாருக என் வயதுக்கேற்ற தன்மைதான் மேலோங்கி நின்றது. " நான் வாத்தியார் பெண். நாம் உள்ளே போகலாமா?" நான் உள்ளே நடந்தேன். அவள் என்னைத்தொடர்ந்தாள். மல்லிகை மணத்தை நிறைத்துக் கொண்டிருந்த அந்த அறையில் ஒரு பெண்ணில் பெண்ணைப் பார்க்க விரும்பினேன். சில சமயங் களில் பெண் தெரிந்தாள்: பல சமயங்களில் பாரத அன்னை தெரிந் தாள். இரண்டில் ஒன்றைக் காண விரும்பினேன். ஒன்றில்லை