பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசவன் 31 5 என் மாங்கல்யத்தால் மனைவியாக இருந்தாலும் மகள்தான். என் அருமை மகளே !' என்று கமறிய குரலில் கூறிய நான், அவளை நெஞ்சத்தோடு சேர்த்து அணைத்தேன். குழந்தைபோல என் அணைப்பில் தேம்பினுள் சிவகாமி. இட்டும் தொட்டும் கெளவியும் துழந்தும் நெய்யுடை அகுசில் செய்பட விதிர்த்த செல்வத்தின் ஸ்பரிச சுகத்தைக் கூறுகிருர் வள்ளுவர் : மக்கள்மெய் தீண்டல் உடற்கு இன்பம்-மற்று அவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. திண்டினேன். இன்பம் பெற்றேன். சொல் கேட்டேன்; துன்பம் கெடுத்து இன்பம் எய்தினேன். பகலில் மனைவியைக் கண்டவன் இரவிலே மகளைக் கண்டேன். தீண்டலும், கேட்ட லும், பார்த்தலுமான முப்பெரு நிதிகளை ஒரே நாளில் அடைந்த நான் எத்தனை பெரிய அதிர்ஷ்டக்காரன் ! ★责