பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பாங்கொலி எத்திவிட வேண்டும் என எண்ணிள்ை. அவள் போகும் வேகத் தில், சேலைத் தலைப்பு காலில் பின்னியது. பின்னிய கால்கள், கற்பாறையொன்றில் மோதியதும் அவள் தலை குப்புற வீழ்ந்தாள். அம்மா !...” அலறல் இருட்டுடே கேட்டது. அந்தக் குரல் வந்த பக்கம் பாட்டரியின் ஒளிப்பாணம் தூரத்திலிருந்து வந்து விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த பாட்டாரியின் ஒளிப் பிழம்பு அந்த இடத்தை நெருங்கியது. பாட்டரியைப் பிடித்திருக்கும் கை நடுங்குவதை, ஒளி ப் பா ண த் தி ன் சிதறல் காட்டிற்று. ஆ.வடிவு...” ரங்கன் அவள் நெற்றியிலிருந்து விழும் இரத்தத்தைக் கண்டதும் திகைத்துவிட்டான். அவள் மயங்கிக் கிடந்தாள். அப்படியே அவளைத் தூக்கி எடுத்து, தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான். இரவோடு இரவாகக் கம்பவுண்டரை அழைத்துவந்து காட்டி அவள் நெற்றிக் காயத்துக்கு மருந்து கட்டச் செய்து, பயத்தோடும், கண்ணிர்த் திவலையோடும் அவள் அருகிலேயே இரவு முழுவதும் விழித்திருந்தான் ரங்கன் கிழக்கு வெளுக்கும் நேரமாகிவிட்டதைக்கூட அவன் உணரவில்லை. படுக்கையில் வடிவம்மாள் புரள்வதைக் கண்டதும் அவனுக்குத் தெம்பும், நம்பிக்கையும் ஏற்பட்டன. அப்பாவுக்கு ஒண்ணுமில்லையே?’ என்ருள் வடிவம்மாள் பதட்டமாக ; படுக்கையினின்றும் எழுந்து அமர்ந்தாள். ஒன்றுமில்லை வடிவு. நீ நிம்மதியாகத் தூங்கு ரங்கன் பேச்சில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. பிறகு அவன் முழு விவரங்களையும் கூறி முடித்தான். அத்தருணம் காலை மோனத்தைக் கலைக்கும் முதற் குரல் ஒலித்தது. வடிவம்மாளின் காதுகள் அக்குரலை உன்னிப்பாகக் கேட்டன. ! அல்லாஹ அக்பர் ; அல்லாஹ அக்பர்...லாஇலாஹ இல்லல்லாஹ் என முடிந்தது அந்த இனிய கீதம். இப்பொழுது ரங்கன் பேச்சில் முழு நம்பிக்கை கொண்டாள் வடிவம்மாள். அவள் விருப்பத்திற்கும், வேண்டுகோளுக்கு மிணங்க, அ ப்பாவை அழைத்து வந்தான் ரங்கன். அவரைக் கண்டதும், அவளுக்கு மலர்ச்சி ஏற்பட்டது. மலர்ந்த அவள் முகத்தைக் கண்டதும் ரங்கன் மனம் தேறியது. அப்பாவிடம் ரங்கனே வைத்துக் கொண்டே முழு விவரமும் கூறினுள் வடிவம்மாள். அவள்