பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகுதும் 359 நெற்றிக் காயத்தைக் கண்டதும் அவருக்கும் வேதனை ஏற்பட்டது. ரங்கனுக்கோ அவளைப் புரிய முடியவில்லை. அவன் முகம் குன்றி லுைம், வடிவம்மாள் தேறிவிடுவாள் என்ற எண்ணம் இன்ப மூட்டியது. அப்பாவுக்கு ஒன்றுமில்லை என்றதுமே, தன் நெற்றிக் காயம் ஆறிவிட்டதாக உணர்ந்தாள் வடிவம்மாள், அவளுக்கிருந்த பக்தியும் பாசமும் தளிர்த்துச் செழித்தன. அந்த எல்லைக் கல்லுக்கும் அப்பால்...மோதினர் முஸ்தபா வையும் வடிவம்மாளையும் பிணைக்கும் அன்புப் பாலத்தை நல்லூர் வரலாறு சொல்லப் போகிறதா என்ன ? நல்லூரார்தான் உணரப் போகிரு.ர்களா ? -