பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 ஆண்பிரிய வாழாது சொல்லிக் கருத்தைச் சிதைத்த நினைவிலும் மயங்கி உள்ளே நுழையாமல் தீர்மானிக்கக் கூடாத ஒன்றைத் தீர விசாரியாமல் முடிவு செய்து வெகு வேகமாகத் திரும்பினர். அவரது ஆவேச வெறிக்கு அடியில் துடிப்பு துணைக் குறியிட்டது. வாயிலில் ஆள் அரவம் கேட்டுக் குமுதம் திரும்பிப் பார்த்து நடப்பதைக் கண்டு துணுக்குற்று விரைவாக வெளியே வந்தாள். அதற்குள் அம்பலம் வண்டிக்குள் ஏறிவிடவே, வண்டியும் பரபரப் பாகக் கிளம்பிவிட்டது-நின்றிருந்த இடத்தில் ஒரே புழுதிப் படலத்தை எழுப்பிக்கொண்டே! - அவளுக்குப் புரிந்துவிட்டது. 关 용 终 "அத்தான் நினைவுப் பாதையிலே பறந்துகொண்டிருந்த அம்பலத்தின் மனப்புள் திரும்பிக் கூடடைந்தது. ' குமுதா! $ 3 அன்று நீங்கள்...' ' மறந்து விடம்மா’’ ‘' மறந்துதானே விடவேண்டும்; ஆகட்டும். இன்னும் கொஞ்சநேரம். பிறகு எனக்கு எல்லாமே மறந்துவிடும் !' அவளது இதழோரத்தில் ஒரு வரட்டுச் சிரிப்புப் பிறந்து மறைந்தது. - ' குமுதா... ' அம்பலம் அதைப் பொறுக்க சக்தி இல்லாமல் அரற்றினர். ' அன்று. அவர் என் அண்ணு, அத்தான் ’’ - " என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே குமுதம், ஆளுல் அன்று எல்லாமே புரிந்து போய்விட்ட மாதிரி முடிவு பண்ணிவிட்டீர்கள், அப்படித்தானே. இருந்தாலும் புரியப்படுத்த வேண்டியதைத் தெரியப்படுத்தாமல் இந்தப் பாழும் மூச்சு நின்றுவிடமாட்டேன் என்று...' ' கு...மு.தம் 1.' 鷲 அம்பலவாணன் அதிர்ச்சியில்ை செயலற்றுச் சமைந்து போய்விட்டார். வெறியில்ை ஏற்பட்ட பலத்தில் குமுதம் குமையக் குமையப் பேசிள்ை. - -