பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி சுப்பிரமணியம் 445 அவரது புத்திமதிகள் விழலுக்கிறைத்த நீராயின. அண்ணன் கொடுத்தனுப்பும் பணம் இருக்கும் வரை கணவன் வீட்டில் கொட்டமடித்து விட்டு, கை வரண்டதும் கணவனோடு எதையா வது பேசிப் புயல் எழுப்பிவிட்டுப் புழுதியாய் ஓடிவந்து விடுவாள் அண்ணன் வீட்டிற்கு, இம்முறை வந்தபோது, அண்ணன் நடையேற்ற மறுத்து விட்டார். தங்கை அழுதாள், கெஞ்சிளுள்; என் நிலை தெரிந் துமா என்னை இப்படி ஒதுக்குகிருய் ? என்று மன்ருடினள், நீலமேகம் மனம் கலங்கவே இல்லை. கணவன் வேலு அடித்ததனால் மண்டையில் ஏற்பட்டிருந்த ரத்தக் காயத்தை-கட்டை அவிழ்த்து அவள் காட்டியும் கூடநீலமேகத்தின் மனம் இளகவே இல்லை. பெண்ணுக்குக் கணவன் வீடே சகலமும் என்பதை அவள் உணர வேண்டும் என்று எண்ணி ஞர் நீலமேகம்,

  • உன் கணவன் வேலு, முரடன் ஒப்புக் கொள்ளுகிறேன்; ஆளுல் அவன் முரட்டுத்தனம் வெறியாக மாறும் அளவுக்கு அவனை மாற்றிய குற்றவாளி நீதானே ? ஒரு மனிதன் நல்லவ கைவோ கெட்டவகைவோ மாறுவது அவனுக்கு வந்து வாய்க்கும் மனைவியைப் பொறுத்ததே.தவறு உன் மேல் தான் !

' என் மீது தவருளுல் என்னைத் திருத்த நி முயற்சிக்கலாம் அண்ணு, ' என்ருளே, அந்த வார்த்தை இன்று விசுவருபம் எடுத்து அவரை வதைத்தது. - " நான் பாவி, அன்றைக்கு வந்தவளே வீட்டிலே சேர்க்க மாட்டேன் என்று மறுத்தால் உடனே ஊருக்குப் போய் விடுவாள்.என்று நினைத்தேன். இப்படி உறவையே துண்டித்து விடுவாள் என்று கண்டேன : ' . இதற்கு முன் சாரதா எத்தனையோ முறை, கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு என் வீட்டோடு வந்து தங்கியிருந் திருக்கிருளே, அப்பொழுதெல்லாம் தங்கையை எட்டியும் பார்த் தறியாத சரவணன், இன்று, நான் இருக்கிறேன் உனக்கு, என்று சொல்லி அழைத்துப் போனன். போனதோடு நிறுத்தி யிருக்கலாம். அவள் மண்டைக் காயத்தையே ஆதாரமாகக் காட்டி கோர்ட்டிலே விவாகரத்துக் கோரி அவள் சார்பாக வழக்குப் போட்டு விட்டான். வெற்றியும் பெற்று விட்டான்; பிளவுபட்ட குடும்பத்தை ஒன்று சேர்க்க ஆயிரம் முயற்சிகள் தேவை. கீறல் விழுந்த இதயத்தை ஒட்டுப் போட்ச் சிரமம் தேவை s . . *...*... ;