பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 விளக்கேற்ற வந்தவள் மெய் சிலிர்க்க வைத்தது. தன்னையறியாமலேயே அக்குரலில் ஒரு மயக்கம் ஏற்பட்டது. தன் அறையிலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த சாந்தா, சுவாரஸ்யமாக மேடையில் பேசிக்கொண்டிருக்கும் கோபாலனைப் பார்த்தாள். அந்தப் பார்வையை அவளால் அவனிடமிருந்து அகற்றவே முடிய வில்லை. அந்த நினைவை அடக்கி ஒடுக்க முயன்றது அவளது மனச்சாட்சி. மனச்சாட்சியை வென்ற அந்த நினைவு அவளுேடு நீண்டநேரம் பேச, அவனைப்பற்றி அறியத் துடித்தது. கூட்டம் முடிந்ததும் அவனுடன் நீண்ட நேரம் பேசிள்ை. அவளே அணு அணுவாக உணர்ந்து இருந்தான் கோபாலன். அவளைப்பற்றி மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். ஆனல் அவளோ இன்றுதான் முதன் முதலாக அவனைப் பார்க்கிருள். பலர் போற்றும் பெருங்குணம் கொண்ட பிரின் ஸ்பாலுடன் பேசுவதில் அவனுக்கு அளவற்ற ஆனந்தம். ஆனல் அவளுக்கே புரியாமல் அவள் மனம் அவனிடம் ஈடுபட்டு விட்டது என்று எண்ணும் அளவுக்கு அவள் உள் மனத்தின் துரண்டுதலால் நேரம் போவதே தேரியாமல் நீண்ட நேரமாக உரையாடினள். அடிக்கடி தன்னைவந்து சந்திக்கும்படி வற்புறுத்தினுள். அவளது வற்புறுத்தல் அவனுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. கோபாலன் போன பிறகு மனச்சாட்சி அவளை மறுபடியும் கண்டித்தது. அவனுடன் இவ்வளவு பேசியது, அவன் மேல் இத்தனை அன்பு கொண்டது தவறு என்று மனச்சாட்சி, கண்டித்ததை, மனம் உதாசீனம் செய்ததோடு, மீண்டும் மீண்டும் சந்திக்க ஆசைப்பட்டது, தன்னிடம் படித்துப் பட்டம் பெற்ற பெண்கள் பலர் எவ்வளவோ பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் பெற்றுப் பிறகு ஆணுக்குத் துணையாய் குழந்தைகளைப் பெற்றுக் குடும்பம் நடத்துவதைப் பார்க்கும் போதெல்லாம் கோபாலனைப் பற்றிய எண்ணம் உள்ளத்தை ஆக்கிரமித்தது. இதுவரை குடும்பம் நடத்தும் பெண்களே அவ்வளவாகப் பொருட்படுத்தாத அவள் உள்ளம் இப்பொழுது குடும்பம் நடத்தும் பெண்களைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தது. இளம் உள்ளத்து இளமை ரத்தம் முறுக்கேறி, அந்த இளம் ரத்தக் கொதிப்பை, பருவத் தின் கொந்தளிப்பை, இதுவரை அடக்கி ஒடுக்கிக் கட்டுப் படுத்தியிருந்த அவளது உணர்வு இப்பொழுது கட்டு மீறிச் செல்ல ஆரம்பித்தது. - தன் தம்பிமார்களின் குழந்தைகளும் தங்கையின் கைக் குழந்தையும் தன்னைச் சுற்றி வளைய வரும்பொழுது முன்பெல் லாம் மகிழ்ச்சி கொள்ளுவாள். ஆனல் தனக்கென்று ஒன்று வேண்டும் என்ற ஆசை அவள் விரும்பாமலேயே அவள் அடி