பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XVIII முடிவுரை @@ಳ್ಲ್ಲಿ தேசத்தில் உலவிவரும் பொருள்ாதார அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து இந்தத் திட் டம் வேறுபட்டது. இது கர்ந்திய முறையிலுள்ள அபூர்வ லட்சியங்களே ஆதாரமாய்க் கொண்டு அமைக்கப்பட் டிருக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தைப் பூரணமாக அமைத்து கிறைவேற்றுவதற்குத் திறமையுள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை என்பதுடன், இந்தப் புது லட்சியங்களில்அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை யுள்ள இளைஞர்களும் தேவைப்படுவர். உண்மையான, உத்வேகமான நம்பிக்கை மலைகளேயும் அசைத்துவிடும் ; அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் அம்மிக் குழவியைக் கூட நகர்த்த முடியாது. உண்மையான தேசிய அரசாங்கம் இந்தியா முழு துக்கும் பொதுவாக அமைவது அத்தியாவசியகம் என்பது சொல்லத் தேவையில்லே அது இல்லர் விட்டால், திட்டம் வகுப்பதெல்லாம் பெருஞ் செலவுக்குக் காரணமான விண் படாடோப் ஏமாற்ருகவும், கானல் நீராகவுமே யிருக்கும். - எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இந்தத் திட்ட்ம், இந்நாட்டில் சாந்தியும் சபிட்சமும் பொருந்திய ஒரு புது சகாப்தத்தை ஆரம் பிப்பதோடு, உலகத்திலுள்ள மற்ற நாடுகளுக்கும் வழி காட்டியாக விளங்கக்கூடும்.