பக்கம்:கானகத்தின் குரல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 127 ஆழ்ந்த சிந்தனையிலிருக்கும்; பிறகு அந்த இடத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன் மிகுந்த துயரமான குரலில் ஒரு தடவை ஊளையிடும். ஆனால் அது எப்பொழுதும் தனித்திருக்காது. நீண்ட குளிர்க்கால இரவுகள் வந்ததும் கீழ்ப்பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளிலே இரையை நாடிப் புறப்படுகின்ற ஒநாய்க்கூட்டத்தின் தலைமையிலே அது மங்கிய நிலவொளியிலே எல்லா ஒநாய்களைவிடவும் பெரிய உருவத்தோடு முன்னால் தாவிச் செல்வதைக் காணலாம். அதன் பெரிய தொண்டையிலிருந்து அந்த ஒநாய்க்கூட்டத்தின் கானம் - யெளவன உலகின் கானம் - ஒலித்துக்கொண்டிருக்கும்.