57
கண்டெழுதி நான் வடக்கே போறேன் போய்
காரியம் நவாபிடத்திற் பேசிவரும் மட்டும்
என் சீமைதனிற் களவு போனால் நெலுப்பா
யெறித்திடுவ னுங்களை யென்றெழுதி யனுப்பி
பஞ்சவர்ண டால் விருது துலங்க நல்ல
பரிநகுல தாமோதரம் பிள்ளை வெளிவந்து
தாமோதரம் பிள்ளை பயணம்
கொம்பு பேரிகை முழங்க சிங்கம்
கொடி மறக்கொடி கருடக்கொடி யூஞ்சலாட தம்பூரு புல்லாங் குழல் முழங்க வீச
தவுண்டை முருமல்லாரி தாரிகை முழங்க இருபது கோடு கதைப்பு நல்ல
ஏழுஒட்டை மீதிலே பேரிகை முழங்க அருகில் மயிரீட்டி யொரு கோடி நல்ல
அழகான தேர்ட்டிக் காரரொரு கோடி கத்தி கேடையக் காரர் சூழ குதிரைக்
காரர் படையின் நூறுமுன்னே நடக்க வெற்றிவளை தடிகாரர் புடைசூழ நல்ல வெடிக்கார எறியம்புக் காரர் புடைசூழ - வெண்கவரி யாலவட்டம் வீச கட்டியர்
மேலெச்சரிக்கை பராக் கென்று கூறு சிங்கமுகச் சிவிகையி லேறி பாதர்
செயசிங்கம் தாமோதரம் வடக்கு முகம் நோக்கி உறவாடி செங்கல்மடை தாண்டி அப்போ
உயர்ந்த தோர் அனுமந்தக் குடியும் கடந்து பெருநாட்டுக் கல்வியுந் தாண்டி அப்போ
பேரான தாமோதரன் கூடார மடித்தான்
இரு தளவாய்கள் சந்தித்தல் கூடார மடித்ததோர் சேதி நல்ல
கெம்பீரமாய் நல்ல தாண்டவனுங் கேட்டு
பெரிய வீட்டுக்காரன் வாறான் என்று
பேசிய தாண்டவ ராயனு மெழுந்து இருவர் சமஸ்தானமு மொன்று நாமும்
எதிர்கொண்டு காண வேணுமென்று நினைத்து
8. ஒட்டை - ஒட்டகை, இதன்மீது பேரிகை வைத்து அடிக்கிறார்கள்