பக்கம்:காப்டன் குமார்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 மடியில் இருந்த சாமான்களை எல்லாம் அவன் கையில் கொடுத்த குமார், இன்னும் நீ என்னை என்னதான் செய்வதாக நினைத்துக் கொண்டிருக் கிறாய்? நீயாக என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் போகிறாயா அல்லது நானாக முயன்று கொள்ளவா??? என்றான் தி ரு மு ரு கு வி ன் தைரியத்தில். கையிலிருந்த பொருள்களை எல்லாம் சரிபார்த்து மனம் பூரித்துக் கொண்டிருந்த மன்னாடி, குமாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ‘ஓ’ வென்று அழுது விட்டான். நான் உன்கிட்டே ஒரு பெரிய விஷயத்தை இதுநாள் வரை மறைச்சு வெச்சுட்டேன். அதுக்கு நீ என்னை மன்னிப்பியா, குமாரு??? என்றான். என்ன விஷயம் மன்னாடி? எதை நீ மறைத்து விட்டாய்? அதை நீ இப்போதாவது சொல்ல முன் வந்திருப்பதற்கு உனக்கு நான் நன்றி அல்லவா செலுத்த வேண்டும் சொல் சீக்கிரம்’ என்று துரிதப் படுத்தினான் குமார்.

  • அளகாகத்தான் பேசறே நீ’’ என்றுகுமாரைப் புகழ்ந்த மன்னாடி 'உன் மாமாவை எனக்கு முன்னமேயே தெரியும். அன்னைக்கு நீ காட்டின போட்டோவைப் பார்த்தவுடனேயே நானு கண்டு கிட்டேன். ஆனால் உன்னை என்னோட வெச்சுக்க வேனும் என்கிற ஆசையாலே அதை நான் சொல்ல வில்லை. மறைச் சுட்டேன். ஆனா நான் சொல்