பக்கம்:காப்டன் குமார்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 யாக இருப்பான். கெட்டிக்காரன். அதோடு மிகவும் நம்பிக்கையானவன். நன்றாகத் தயார் செய்திருக்கிறேன். மாமாவாக நடித்து நீங்கள் அவனை உங்களுடனேயே எப்படியாவது வைத் துக் கொண்டு விடுங்கள்:- என்று அவருக்கு எழுதி என்னிடமே கொடுத்து அனுப்யினான். அவ்வளவு அவனிடமுள்ள நம்பிக்கை என்றோ போய் விட்டது. ஆகையால் வழியில் நான் அதைப் பிரித்துப் படித்து ஒட்டி விட்டேன்... பிறகு என்ன? முதலில் கதவைத் தட்டி, 'மாமா என்றதும், மாமனாவது மண்ணாங்கட்டி யாவது?’ என்று சுள்ளென்று விழுந்த மனிதர்மன்னாடியின் கடிதத்தைப் படித்ததும், ஐயோ,