பக்கம்:காப்டன் குமார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

வழியிலுள்ள தன் நண்பன் சுவானின் வீட்டிற்குச் சென்றான்.

சுவானும், குமாரும் நெருங்கிய நண்பர்கள்; ஒரே பள்ளியில் படிப்பவர்கள். குமாரின் தந்தையைப் போலவே சுவானின் தந்தையும் பெரிய பணக்காரர்.

ஆனால் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அவர்களது பங்களா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் சீனத்துப் பட்டினாலான அழகிய திரைச் சீலைகள் தொங்க விடப் பட்டிருக்கும். அதில் அழகிய பூ வேலைகள்