பக்கம்:காப்டன் குமார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 எஜமான்?? என்று அவன் oபாதாக அழுது விட்டான். திருமுருகு மிகவும் நன்றியுள்ள வேலை யாள். ராமசாமிப் பிள்ளையிடம் அவனுக்கு உயிர். அப்பாவுக்கு என்ன முருகு? நான் இங்கிருந்து போகும் போது அவர் நன்றாகத் தானே இருந்தார்?’’ 6 ஆமாம் தம்பி! இங்கிருந்து நீ போன பிறகுதான் அந்தப் பேரிடி விழுந்தது. அப்பாவினுடைய நேத்தாஜி மில்லையும், இந்தியா ஸ்டோரையும் பர்மா சர்க்கார் பிடுங்கிக்கொண்டு விட்டது. அது மட்டுமா? பாங்கியிலே போட்டிருந்த பணம், வாங்கி யிருந்த வீடுகள் எல்லாமே போய் விட்டன. இப்போது நாம் இருக்கும் பங்களா கூட இனி நமக்கில்லை. சீக்கிரம் காலி செய்து விட்டு இந்தியா போய்விட வேண்டுமாம்?’ என்று கூறும்போதே திருமுருகுவின் குரல் கரகரத்தது. அப்போது அங்கே வந்த டாக்டர் திருமுருகு விடம் சில மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு, அவசியமானால் காலையில் போன் பண்ணச் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டார். கட்டிலின் அருகே நின்று கொண்டிருக்கும் தன் செல்வங்களை ராமசாமிப் பிள்ளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதிர்ச்சி அவ்வளவு கடுமையாக அவரைத் தாக்கி விட்டது. திருமுருகு, கையிலிருந்த மருந்துச் சீட்டைப் பார்த்தான். வீட்டிலே இருந்த சொற்பத் தொகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/24&oldid=791234" இலிருந்து மீள்விக்கப்பட்டது