பக்கம்:காரும் தேரும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

தேசிங்கு ஆ ண் ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். க ண் டா ச் சி பு ரமும் தி ரு வ ண் ணு மலையும் இந்த இ ல க் கி ய ப் பொழில், கற்ற இடங் கள். ைபந் த மி ழ் வளர்க்கும் பச்சையப் பன் கல்லூரிப் பாசறை மறவருள் ஒ ரு வ ர். அ ன் னை த் தமிழில் பி. ஏ. ஆனர்சு. அங்கு, முதல் வ கு ப் பி ல் தேறிய மு. த ல் வ ர். 'குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட்., பட்டமும், சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரி யராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிருர். முன்னுள் தமிழக ஆளுநருக்குத்தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர்.

இந்த முற்றிய புலமையாளர்!

பத்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், தமிழ் இலக்கிய வரலாறு” ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணிகலன், பெருந்தகை மு. வ. | ஒரு நூல்! சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்த பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத் துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு நல்வழி நிலையம்), சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதினம்) .

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ் பாடும் அந்தமிழ்த் தும் பி: அயராது உழைக்கும் அருஞ் செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!

சி. பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்களுக்குச் சொல்வது சிறக்கப் பாடுபடு!

- மா. செ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/145&oldid=554141" இலிருந்து மீள்விக்கப்பட்டது