இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 காரும் தேரும் --
என்றும் தொண்டை மண்டல சதகம் சிறப்புறத் தொண்டை வளநாட்டின் பெருமையினைப் பறைசாற்றிப் பேசுகின்றது.
இவ்வாறாகத் தொண்டை நாடு அன்றும் இன்றும் வரலாற்றுப் பெருமையினாலும், சமய உண்மையினா லும், இலக்கிய சிறப்பினாலும், தல மேன்மையினாலும், வேளாளர் தம் விருந்துாட்டும் சிறப்பினாலும், நெசவுத் தொழில் நேர்த்தியினாலும், பண்பட்ட சான்றோர் வாழும் பழம்பெருஞ் சிறப்பினாலும் இன்னும் பல்லாற்றாலும் சிறந்து விளங்கக் காணுகின்றோம்.