பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

இது இல்லையே! இது ஏதோ உயர்ந்த ராசி போல இருக்கிறதே! இதை யார் கொடுத்தார்கள்?" என்று கேட்டான்.

இறைவன் அருளால் கிடைத்தது என்று சொல்ல அம்மையார் விரும்பவில்லை. அந்த அற்புதம் இரகசியமாகவே இருக்கட்டும் என்பது அவர் எண்ணம். ஆனால் கணவன் கேட்டதற்கு உண்மையைச் சொல்வதுதான் கற்பு நெறிக்கு அழகு என்றும் ஓர்ந்தார்.சிறிது நேரம் அவர் தடுமாறினார். பிறகு நடந்ததை நடந்தபடியே சொல்வதுதான் தக்கதென்று முடிவு செய்து, எல்லாவற்றையும் பரமதத்தனிடம் உரைத்தார்.

இறைவன் அருளால் மாம்பழம் கிடைப்பதாவது?. உலகத்தில் நடக்கிற காரியமா இது?" என்று அவன் மயங்கினான். பிறகு, "அப்படியானால் அவனருளால் மற்றொரு பழத்தை வருவித்து இலையில் இடு" என்றான்.

அம்மையார் என் செய்வார்! உள்ளே சென்று, “இறைவனே, இவருடைய விருப்பத்தை இப்போது நிறைவேற்றவிட்டால் நான் சொன்னது பொய்யாகிவிடுமே” என்று மனம் நைந்து வேண்டினார். இப்போதும் இறைவன் அருளால் அவர் கையில் மாங்கனி ஒன்று வந்தது. அதைக் கொணர்ந்து தம் கணவன் கையில் தந்தார். பரமதத்தன் மிக்க வியப்பை அடைந்து அதை வாங்கிக் கொண்டான். ஆனால் அது உடனே கையிலிருந்து மறைந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகவே, அம்மையார் தெய்விகம் நிரம்பியவர் என்ற உண்மை அவனுக்குப் புலனாயிற்று. இவள் மற்றப் பெண்களைப் போன்றவள் அல்ல; தொழுவதற்கு உரியவள்' என்ற மதிப்பும், அவரோடு வாழ்வதற்குப் பயமும், இன்ன செய்வதென்று தெரியாத தடுமாற்றமும் உண்டாயின. 'இனி இவளோடு வாழ இயலாது' என்று தீர்மானித்துக் கொண்டான். அதுமுதல் அதிக நெருக்க மின்றி வாழலானான்.